Wednesday 17 March 2021

தூய கண்ணீர்



சிறார் கதைப் புத்தகம்  , யூமா வாசுகி எழுதிய இப்புத்தகத்தை தன்னறம் நூல் வெளி தனது முதல் பதிப்பாக  2019 இல் வெளியிட்டுள்ளது. 10 நாட்கள் முன்பாக வீடு தேடி வந்த இந்தப் புத்தகத்தை நம்மிடம் வழங்கிய சிவ ராஜ் தம்பிக்கு எனது பள்ளிக் குழந்தைகள் சார்பாக முதலில் பேரன்பு .


நான் இந்தப் புத்தகத்தை வாசித்த போது , இன்றைய ஆசிரியர்களது பலரின் கூட்டு செயல்பாடுகளை இணைத்து ஒரு ஆசிரியரைப் படைத்ததாக முனியய்யா என்ற  பாத்திரம் இப்புத்தகத்தில் வாழ்கிறதை உணர முடிகிறது. 


ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பள்ளிக்குள் மாணவர் மனதில் மிக இடம் பிடிப்பவராக  வாழ்கிறார் எனக் காட்டும் அதே சமயத்தில் ,  சமூகப் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து தனது உயிரையே தியாகம் செய்து தன்னை நிரூபித்து ... இறந்த பின்னும் ஊர் மக்களுடைய மனதில் வாழ்ந்து நிலைக்கிறார் என்பதை ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் உணர்த்துகிறது இக் கதை. 


 மாணவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவுவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வெற்றி கண்டு அன்பு செலுத்துகிறார்கள்  என்பதை மாணவர் மனதிலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ள இந்தப் புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டியது. 


தூய கண்ணீர் என்ற இந்தக்  கதை முழுவதும் அன்பை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கும்  அழகான சிலந்தி வலை போல ... ஆசிரியர் மாணவர் மீதும் சமூகத்தின் மீதும் வைத்துள்ள அன்பு  , மாணவர்கள் அந்த  ஆசிரியர்  மீது வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் , பெற்றோர்கள் மீது ஆசிரியருக்கான அன்பு  , மாணவர்களுக்குள் நட்பால் பலம் பெறும் அன்பு , ஊர் மக்களுக்கு ஆசிரியர் மீது ஏற்படும் அன்பு, அதன் நீட்சியாக நடக்கும் அத்துணை நிகழ்வுகளும்   நமக்குள்ளும்  தூய கண்ணீர் வரவழைக்கும் படைப்பு .


இதனை எம் பள்ளி மாணவியரிடம் ஒப்படைத்ததன் பலன் …. பல குழந்தைகள் அழகான பின்னூட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அதையும் உங்களுக்குப் பகிர்கிறேன். 


உமா






No comments:

Post a Comment