Wednesday 17 March 2021

வாசிப்பு –என் ஆடையென்பது யாருடைய குருதி ?

என் ஆடையென்பது யாருடைய குருதி ?


ஆசிரியர் : சிவகுருநாதன் 

வெளியீடு : தன்னறம் நூல் வெளி ,குக்கூ காட்டுப்பள்ளி .r

முதல் பதிப்பு : 2021

விலை : ரூ 40

பக்கங்கள்: 56


எல்லாம் எந்திரமயமாகிப் போய் விட்ட காலத்தில் காந்தியத்தை மீட்டு எடுக்கும் பணியாக ராட்டையில் நூலிழையை செலுத்தி நெசவு செய்யும் அற்புதமான உடலுழைப்புப் பணியை வெற்றிகரமாக நடத்தி நூற்பு என்ற பெயரை நம் எல்லோருடைய மனதிலும் நிலைக்கச் செய்யும் வளர்ந்து வரும்  இளம் தொழிலதிபர் தான் இந்த நூலின் ஆசிரியர் . ஈரோடு என்றாலே துணி உருவாக்கத்திற்குப் பெயர் போனது. அங்கு சென்னிமலை என்ற ஊரில்  கைத்தறி நெசவு நூற்புப் பட்டறையை நிறுவியுள்ள சிவகுருநாதன் அங்குள்ள மக்களின் இன்றைய வாழ்வை அடிப்படையாக வைத்து இந்நூலை நமக்காக உருவாக்கியது சிறப்பு. அவரது முதல் நூல் இது. 


இந்தப் புத்தகம் பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் மனித குலத்தின் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி பல்வேறு கோணங்களில் வாசிப்போரின் உள்ளத்தைத் தட்டியெழுப்புகிறது.காந்தியத்தை மீட்டெடுக்கும் அனுபவங்களை உருவாக்கும் பொருளடக்கம் நிறைந்து கிடக்கிறது இந்த நூல் முழுக்க . மார்க்சியத்தையும் ஒவ்வொரு வரிகளிலும் உணர முடிகிறது.  உழைப்புச் சுரண்டல் எல்லா வகையான தொழில்களிலும் இருந்தாலும் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடையின் தயாரிப்புகளில் நெடுங்காலமாக இருந்து வரும் உழைப்புச்  சுரண்டல் , பெண்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் சிக்கலான முடிச்சுகள் இவற்றைக் குறித்து மிகப் பெரிய ஆய்வுகளைத் கந்து  ஆனால் சுருக்கமான தரவுகளின் அடிப்படையில் நம் முன் பட்டியலிடும் சிவகுருநாதன் தான் வாழும் 1010 காலணி மக்களின் வாழ்வியலை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்வது மனதைக் கிளறுகிறது. நானும் அடிப்படையில் நெசவு சார்ந்த குடும்பம் என்பதால் இப்புத்தகம் என்னை வெகுவாக பாதித்து விட்டது - திருப்பூரின் நெசவாலை மக்களை, ஈரோட்டின் நெசவாளர்களின் கதைகளை மனதில் நிறுத்தும் ஆய்வுக் கட்டுரைகளாக  நிரம்பிய இப்புத்தகத்தை அனைவரும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும் .




 

No comments:

Post a Comment