இது கிண்டிலில் வாசிக்கப்பட்டப் புத்தகம் உயிரியல் வல்லுனர் சார்லஸ் டார்வின் மேற்கொண்ட கடற் பயணம் மனிதனின் தோற்றம் மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிகளில் ஏற்படுத்திய முக்கியத்துவம் பற்றிய சிறிய நூல் இது.
இங்கிலாந்து அரசு , தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதி , நீரோட்டங்களின் ஆய்வுக்காக, கடற்பயண வரைபடம் தயாரிக்க ஒரு குழுவை HMS பீகில் கப்பலில் பயணம் செய்ய அனுப்பியது. இங்கிலாந்தின் உயிரியல் மற்றும் புவியியல் அறிஞரான டார்வினும் அந்தக் குழுவில் ஒருவராகப் பிரயாணம் செய்கிறார். குழுவில் உள்ளவர்கள் கடலில் பிரயாணம் செய்தால் இவர் நிலப்பகுதிகளை ஆய்வு செய்கிறார். பறவைகளின் அலகுகள், தொல்லியல் படிமங்கள் போன்ற எல்லாவற்றையும் திரட்டி வந்து ஆய்வு செய்து கொண்டே இருந்துள்ளார். எரிமலைகளின் பால் ஈர்ப்பு வந்த டார்வின் அதை ஆய்வு செய்யவே டார்வின் , ஈக்வடார் தீவான கேலபகோஸ் தீவு செல்கின்றார். ஆனால் அத்தீவில் வாழ்ந்த வேறுபட்ட உயிர் ,இராட்சத உயிரினங்கள், அங்கு கண்ட குருவிகள் , இன்னும் பிற அனைத்தும் தான் அவரை பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட வைக்கிறது. அந்த பயணம் குறித்து இப்புத்தகம் பேசுகிறது.
No comments:
Post a Comment