Wednesday 17 March 2021

கண்டத சொல்றேன்

கண்டத சொல்றேன் 


ஆசிரியர்  கிருஷ்ணவேல்


நமது குழுவின் பரிசுப் புத்தகமாக அனுப்பப்பட்டது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல விடயங்கள் , ஆனால் அது குறித்து ஆழமான உற்று நோக்கலோ தகவல் அறியப்படாமலோ இருக்கும். அவை குறித்த விழிப்புணர்வாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 

உதாரணம் , எல்லோருமே வங்கிக் கடன் வாங்கி மாதத் தவணை கட்டி வருவோம். ஆனால் சிபில் ஸ்கோர் குறித்து நமக்கு நல்ல புரிதல் இருக்குமா என்றால் சந்தேகமே. அது பற்றி பேசுகிறது புத்தகம் . 


ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் உலகின் ஏதோ ஒரு மூலையை இணைத்து தரவுகளுடன் கட்டுரைகளைத் தந்துள்ளார். 


ஆல்கஹால் பற்றிய பதிவு விளையாட்டாக அதன் விபரீதத்தை விளக்குவதாக, அவற்றின் கோரப் பிடியிலிருந்து மீண்டு வரும் யதார்த்த நடைமுறைகள் பற்றிப் பேசுகிறது.


பசங்க 2 திரைப்படத்தை ஒரு புறம் எல்லோரும் கொண்டாடிய தருணங்களை அக்குவேராக அலசுகிறார் ஆசிரியர் . அவற்றிலிருந்து குழந்தைகளின் வளர்ப்பு முறை , இன்றைய கல்வி முறை என அனைத்தையும் தொடர்புபடுத்திய விதம் சிறப்பு.


பாலியோமரி என்ற வித்யாசமான  இவரது பதிவு  நமக்கும் புதியதாகவும் 

பைத்தியக்காரத்தனமாகவும் தான் தோன்றுகிறது .அதென்ன பரஸ்பர ஒப்புதல் நேர்மை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய பலருடன் கூட்டுறவு கொள்வது ? படித்துப் பார்த்தால் தான் புரியும். 


மாங்காடு கோவில் சிற்பங்கள் , லிங்க வழிபாட்டின் ஆதியும் மூலமும் , நீங்களும் ஆகலாம் ஒரு இல்லுமினாட்டி, ஏசுவுக்கும் சூப்பர் மேனுக்கும் என்ன தொடர்பு , தேவமைந்தனின் பிறந்த நாள்  என மதம் , சமய வழிபாடு இப்படி விலாவாரியாக சில பதிவுகள் . எதையும் விட்டு வைப்பதாக இல்லை. 


வைரத்தின் வரலாறும் அது ஏன் திரும்ப விற்க முடியாத பொருளாகவும் இருக்கிறது என்று ஒரு பக்கம் அலசியிருக்கிறார். 


இது மட்டுமா , திருநெல்வேலி என்ற சாதியக் கட்டமைப்பைக் காலம் காலமாக பிடித்துக் கொண்டிருக்கும்  நகரின் வரலாறு தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என ஏன் சொல்லப்பட்டது என்பதற்கான விரிவான பதிவும் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. 


இந்திய சூப்பர்ஸ்டார்களையும் விட்டு வைக்கவில்லை , இந்திரா காந்தியின் குடும்ப அரசியல் வரலாற்றையும் சொல்லாமலில்லை. ஹீலர்கள் , தடுப்பூசி , இயற்கை உணவுகள் என இவற்றையும் தொட்டுச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment