மானுடர்
மானுடர்
நெருடல்களே இல்லா
நெஞ்சங்கள் இந்தப் பூவுலகில்
வாழ்ந்ததுமில்லை....!
வாழ்வதுமில்லை...!
சாலையோரம் இயல்பாய்
சில காட்சிகளைக்
கடக்கும்போது கூட
களவு போன மனதாக .....
கனவுகளையும் -பழைய
நனவுகளையும் -தினம்
சந்திக்கவும்- அடிக்கடி
சிந்திக்கவும் செய்யும்
மனிதராய் தான்
மானுடர்கள் இன்றும்
என்றும் எங்கும்
வாழ்கிறோம்....