Wednesday 17 March 2021

புத்தகத் திருவிழா - 2021

YMCA புத்தகத் திருவிழாவில் …


தமிழர் தேசியக் கண்ணோட்டம் அரங்கு எண் 83 , Thumbi அரங்கு எண் 22 , கோதைப் பதிப்பகம் அரங்கு எண் 161 , ஆகிய 3 அரங்குகளிலும் –கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற எனது புத்தகங்கள்  வைக்கப்பட்டிருந்தன. மூன்று அரங்குகளிலும் தேடி வந்து நண்பர்கள் , ஆர்வலர்கள் வாங்கிச் சென்றதாகப் பதிவு செய்தனர். மிக்க மகிழ்ச்சி , அனைவருக்கும் பேரன்பு ♥️♥️♥️


இந்து தமிழ் நாளிதழில் திசைகாட்டி பகுதியில் இப்புத்தக அறிமுகம் வந்ததை சுட்டிக் காட்டி பலரும் வாங்கிச் சென்றதாக அரங்குகளில் கூறியது மகிழ்ச்சி. இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி .


வெளியூர்களிலிருந்து தொடர்ந்து பதிப்பகத்திற்கு அழைப்புகள் வருவதும் அவர்கள் அனுப்பிய விவரங்களும் குறித்து அப்டேட் செய்கிறார் பன்மை வெளி பதிப்பகத்தார் .அவர்களுக்கும்  எனது அன்பு. 


இலங்கையிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாசிக்க ஆவலாக இருப்பதைத் தெரிவித்து அவர்களுக்கு அனுப்ப தயாராக உள்ளன. ஏற்பாடுகளை கவனிப்பதாக பதிப்பகப் பொறுப்பாளர் வெற்றி கூநியுள்ளார். இலங்கை வாழ் மக்களுக்கும் பேரன்பும் 


ஈரோடு ,சென்னை , நாமக்கல் ,நாகை , கோவை .முதலான ஊர்களிலிருந்து ஆசிரிய நட்புகள் தபால் வழியே புத்தகம் பெற்ற படங்களை அனுப்பி மகிழ்கின்றனர் . அசத்தும் அரசுப் பள்ளி 

ஆசிரியர்கள் குழுவினர் பலரும் இவர்களில் அடங்குவர் .அனைவருக்கும் பேரன்பு ♥️♥️♥️.


உடுமலையிலிருந்து தமிழ்ப் பாவை அம்மா நூலைப் பெற்றுக் கொண்டேன் உமா எனக் கூறி மகிழ்ந்தார். அதே போல கரூரிலிருந்து தம்பி லெவன் போஸ் , நூலை வாங்கி , படிக்க ஆரம்பித்து விட்டதை செய்தியாக அனுப்பி இருந்தார். புத்தகத் திருவிழாவில் நண்பர் செல்வம் ராமசாமி எனது கையெழுத்துப் பெற்று புத்தகத்தை தும்பி அரங்கிலிருந்து வாங்கிக் கொண்டார். அனைத்திந்தியக் கல்விப் பாதுகாப்ப இயக்க நண்பர் யோகராஜன் , ஸ்ரீ பத்மநாபன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பிரபு ஆகியோரும் பணம் அனுப்பி வைத்து நூலுக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.  


தோழி பரமு வழியாக வெளியிட்ட அன்றே புத்தகத் திருவிழா மையத்தில் ,கவிஞர் இளம்பிறை அவர்களிடமும் நூல் அளிக்கப்பட்டது. எனது ஆசிரியர் திருமதி வள்ளியம்மை அவர்களுக்கும் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


பள்ளித் தலைமை ஆசிரியர் , நட்புத் தலைமை ஆசிரியர்களும் நூலைப் பெற்றுக் கொண்டனர். குரோம்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுனர் தான் வாங்கியது மட்டுமின்றி , தனது நண்பர்களுக்கு பரிசு தரவும் எனது வழியே மூன்று நூல்களைப் பெற்றுக் கொண்டார். 

எனது பள்ளி ஆசிரியர்கள் சிலரும் மல்லிகா , புவனா , மலர் விழி , மீரா, விஜயலட்சுமி ஆகியோரும் பணம் செலுத்தி இப்புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர் .பயணம் நீள்கிறது. 


அனைவருக்கும் பேரன்பு .

No comments:

Post a Comment