Wednesday 31 March 2021

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

ஆசிரியர் : அம்புஜம்மாள்

ஆசிரியர் பற்றி:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரின் மகளான அம்புஜம்மாள் (1899-1993) அவர்கள் 1920 இல் தான் முதன்முதலாக காந்தியை சந்திக்கிறார், ஹரிஜன மக்களின் நலத்தை வேண்டி தனது வைர நகைகளை பட்டுத் துணிகளை நல நிதிக்காக தந்துவிடுகிறார். உப்புச்சத்தியாகிரத்தில் பங்கேற்று சிறை சென்றவர். பள்ளிக்கூட ஆசிரியராகவும், “சாரதா மகளிர் யூனியன்” “சுதேசிய பெண்கள் லீக்” போன்ற மகளிர் அமைப்புகளில் முக்கிய அங்கத்தினராகவும் இருந்தார். இந்தி பிரச்சார சபையின் நிர்வாகக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். நவம்பர் 1934-ஜனவரி1935 வரை வார்தா ஆசிரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியுள்ளார். பாலிய விவாகம், தேவதாசி முறை, பலதார மணம் பொன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நீங்கள் பாடுபட்டார். 1948 இல் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தை தொடங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு பல் முன்னெடுப்புகளை எடுத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் (1957-1962), மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் (1957-1964) இருந்துள்ளார். வினோபா அவர்களின் பூதான இயக்கத்தின் போது தமிழக யாத்திரையில் பங்கேற்றவர்.

நூல் குறித்து 

இந்நூல், 1944-இல் தினமணி வெளியீடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர், அம்புஜம்மாள் அவர்கள் காந்தியத்தால் தான்   பெற்ற அனுபவங்களைத் தொகுத்துக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. மொத்தம் 13 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், ஒவ்வொன்றும் காந்தி மற்றும் கஸ்தூரிபா ஆகியோருடன் நூலாசிரியர் கழித்த நாட்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நினைவுகள் குறித்து பேசுகிறார் .இறுதியில் காந்தியடிகள், கஸ்தூரிபா  நூலாசிரியருக்கு எழுதிய கடிதங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.

1. முதல் சந்திப்பு  - இக்கட்டுரையில் அம்புஜம்மாள் முதன் முதலாக தனது வீட்டில் மகாத்மா, கஸ்தூரிபா இருவரையும் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் . விசித்தரமான விருந்து என்று தனது வீட்டு விருந்தோோம்பல் நிகழ்வில் காந்தியடிகளுக்காகப் படைக்கப்பட்டிருந்தவற்றைப் பட்டியலிடுகிறார்.  வெந்த மணிலாக் கொட்டை, தேங்காய் வழுக்கை , ஆப்பிள், ஆரஞ்சு ,திராட்சை, பேரீச்சை, பாதாம் பருப்பு, நீர் மோர் ,இளநீர் ஆகியவை காந்தியின் உணவுகளாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன

  1893 இல் முதன் முதலில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிற்கு பாரிஸ்டராகவே போனார். இந்திய வியாபாரியின் தொழில்முறை ஆலோசனைக்காக அங்கு சென்றிருந்தார் .ஆனால் கூலி பாரிஸ்டர் ஆகத்தான் கருதப்பட்டார். இந்தியர்களை எல்லாம் கூலிகள் என்று கருதிய வெள்ளையர்கள் அங்கு இருந்ததை கண்டு மிகவும் வேதனைப்பட்டார். பிரிட்டோரியா வழி செல்லும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டார் முதல் வகுப்புப் பிரயாணம் செய்யகருப்பருக்கு உரிமை இல்லை என்ற நடைமுறை அங்கு இருந்தது அப்பொழுது காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே இறக்கி விட்டது பற்றி நாம் வரலாற்றில் படித்திருப்போம். அதேபோல அங்கு ஜகன ஸ்பார்க் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் இந்தியர்கள் தங்குவதற்கு இடம் கிடையாது என்று இவரை தங்க வைக்க மறுத்து விட்டனர் ,அது மட்டுமன்றி பிரிட்டோரியாவில் பேவ் மெண்ட் அதாவது நடைபாதையில் நடந்து போகவும் கூடாது கருப்பர்கள் என்ற கட்டுமானம் இருந்தது .காந்தி அதன் வழியாக நடந்து போனதற்கு ஒரு காவல்காரர் அவரை அடித்து இருக்கிறார். இவற்றையெல்லாம் அனுபவித்த காந்தி ,தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார் .காந்தி தம்பதியினர் சிறை சென்றது குறித்த வரலாறுகளை நாம் படித்திருப்போம். அவ்வாறு சிறை சென்று வந்த காந்தியடிகளை இந்திய மக்கள் வரவேற்றனர் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர் அப்பொழுது தமிழ்நாட்டில் சென்னையில் அம்புஜம்மாள் அவர்களின்   வீட்டில் , இந்த தம்பதிகளுக்காக விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் அப்போது தான் இந்த விசித்திர உணவு குறித்து அம்புஜம்மாள் பதிவிட்டிருக்கிறார்.

 கஸ்தூரிபா காந்தி தூய வெள்ளைப் பாவாடையும் தாவணியும் அணிந்து மெலிந்த உருவத்துடன் உலக அனுபவத்தால் கனிந்த தாயன்பு கொண்ட முகத்துடனும் எளிமையின் வடிவமாக அந்த விருந்து சமயத்தில் தனது வீட்டில் பார்த்ததாக அம்புஜம்மாள் பதிவிடுகிறார். ஒரு ஜோடி இரும்புக் காப்பு மட்டும் அணிந்திருந்தார் .ஆனால் அம்புஜம்மாள் அந்தஸ்து அலங்காரம் படிப்பு இவைகளைப் பற்றிய பெருமிதம் இருந்த தனது பண்பினால் எளிமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிடுகிறார் .தன் உடல் முழுவதும் வைரம் அணிந்திருந்தது பார்த்து கஸ்தூரிபா புன்முறுவல் செய்ததாகவும் அதை எண்ணி அவற்றை எல்லாம் கழற்றி எறிய வேண்டும் எனவும் அப்போது எண்ணியதாக  அம்புஜம்மாள் குறிப்பிட்டுள்ளார் .

 சென்னை வந்திருந்த பொழுது காந்தியடிகள் ஒரு கூட்டத்தில் பேச அன்று மாலை செல்கிறார் .சென்ட்ரல் முதல் வி.பி. ஹால் வரை எள்ளுப் போட்டால் எள்ளு விழாத அளவிற்கு கூட்டமாக நிறைந்திருந்தது கஸ்தூரிபாய் அவர்களைக் கூட்டத்தில் சிக்க வைத்துவிட்டு காந்தியடிகள் தனியே சென்று உள்ளார். அதைப் பார்த்து அம்புஜம்மாள் மனதால் காந்தியை திட்டி உள்ளார் .தனியாக இப்படி விட்டு விட்டுப் போகிறார்  தனது மனைவியை என்று மிகவும் அவர் மீது கோபப் பட்டதாகவும் ஆனால் பின்னாட்களில் அது புரிய வந்தது ,பெண்கள் தனியாக ச சமாளிப்பதற்காக இவ்வாறு நடந்தது இவற்றையெல்லாம் எங்களுக்கான பயிற்சியாகவே காந்தியடிகள் அன்று செய்துள்ளார் என்று புரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார் .1920 ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. மற்றொரு சமயம் 1930 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் சென்னையில் ஸ்திரீகளுக்கான  சுதேசி சங்கம் உருவாக்கிட அதில் தேச சேவைகள் ,சுதேச பிரச்சாரம் ,அன்னியத் துணி கடை மறியல் இவ்வாறெல்லாம் அம்புஜம்மாள் இறங்கி பணியாற்றி காவல்துறை முன்னிலையில் தைரியமாக பல போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றார் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ,அன்று கஸ்தூரிபாவைத் தனியாகக் கூட்டத்தில் காந்தியடிகள் விட்டுச் சென்றதுதான் என்று பின்னால் புரிந்து கொண்டதாக பதிவுசெய்கிறார்.

 2. சென்ற மகா யுத்தத்திற்கு பிறகு என்ற இரண்டாவது கட்டுரையில், காந்தி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தந்துள்ளார் ,அகிம்சாவாதி என்றாலும் போருக்கான ஆட்களையும் பணத்தையும் சேர்த்து உதவியுள்ளார் இதற்கு காரணம்  விரைவாக சுய ஆட்சி வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கமிட்டி ரவுலட் சட்டம் ஏற்படுத்தப்பட்டது பற்றி நாம் அறிவோம் வரலாற்றில் புரட்சிக்காரர்கள் என பல வாலிபர்களை சிறை வைத்தனர் சாத்வீக முறையில் காந்திஜி ரவுலட் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என முயற்சி செய்தார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவாக ஒத்துழையாமை இயக்கம் உருவானது அந்த காலகட்டத்தில் காந்தி குல்லாய் கதர் மையம் நாடுகளின் தகனம் இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறின அந்த காலகட்டத்தில் காந்தி குல்லா மிகவும் அம்புஜம்மாள் குடும்பமும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததைப் பதிவு செய்துள்ளார் அம்புஜம். ஆகவே தாங்கள் அணிந்திருந்த வைரங்களை எல்லாம் இரும்புப் பெட்டியில் கழற்றி வைத்து விட்டனர், தங்கள் வீட்டில் டிராயிங்  அறையில் காந்தியடிகளின் பெரிய உருவப்படம் ஒன்று வைத்து வழிபடுகின்றனர், வெள்ளைக் கதர் ஆடை அணிந்து கையில் கீதையுடன் நின்றிருந்த அந்த உருவத்தைக் குறித்து அது எப்படியான ஒரு மாற்றத்தை பார்க்கும் மனிதர்களிடையே உருவாக்கி காந்தியத்தை உள்வாங்க வைத்தது, அமைதியான புரட்சிகரமான சிந்தனைகளை கொடுத்தது என்று மிகவும் நெகிழ்ந்து இந்த கட்டுரையில் அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.

 3.வைக்கம் சென்றபோது என்ற மூன்றாவது கட்டுரை, 1925 இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வைக்கம் என்ற இடம் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது ,ஹரிஜன மக்கள் கிருஷ்ணர் கோவிலைச் சுற்றிய ரஸ்தாவில்நடமாடக் கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர், அவர்களும் ரஸ்தாவில் நடக்க வைக்கம் சத்தியாகிரகம் உருவான நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அப்பொழுது காந்தியடிகள் வைக்கம் செல்லும்போது சென்னையில் வந்து அம்புஜம்மாள் வீட்டில் தங்குகிறார்  அந்த அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த கட்டுரை. முதல் முறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தபொழுது சென்னை பல் இவர்கள் வீட்டிற்கு வந்தபோது ஒரு சமூக ஊழியராக தான் தெரிந்தார் காந்தியடிகள் .ஆனால் இந்த முறை அவர் வரும்பொழுது மக்களிடையே தேசபக்தி சமூகப்பற்று இவற்றை விதைத்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தார் என்று அம்புஜம்மாள் பதிவு செய்கிறார். இதில் மீராபென் பற்றியும் குறிப்புகள் உள்ளன அப்பொழுது சென்னை நகர சபைத் தலைவராக இருந்த கான்சாஹிப் அவரது தலைமையில் மகாத்மாவிற்கு வரவேற்பு பத்திரம் ஒன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெறுகிறது அதை முடித்துக்கொண்டு அம்புஜம்மாள் வீட்டில் காந்தியடிகள் பார்ப்பதற்காக பொதுமக்கள் நிறையப்பேர் வந்திருந்தனர் அப்பொழுது ஒரு குழந்தையை மகாத்மா மடியில் வைத்துக் கொண்டுள்ள அந்த குழந்தை கைகளில் தங்க வளையல்கள் நிறைய போட்டு இருக்கின்றது அந்த குழந்தைக்கு ஆறு வயது அம்புஜம்மாள் தனது கழுத்தில் முத்தாரம்  போன்ற நகைகளை அணிந்துள்ளார். அந்தக் குழந்தையின் கைகளில் இருக்கக்கூடிய வளையல்களில் எனக்கும் ஒன்றை கொடுப்பாயா கொடுப்பாயா என்று காந்தியடிகள் கேட்டுக்கொண்டிருந்தார் சுற்றியிருப்பவர்கள் விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என்று நினைத்து  இருந்தனர் ஆனால் அவர் நிஜமாகவே கேட்டிருக்கிறார். குழந்தையின் தந்தை யார் குழந்தையை பார்த்து தாத்தாவிற்கு ஒன்றை கற்றுக் கொடுத்து விடு என்று கூற இதுதான் சாக்கு என்று காந்தியடிகள் வளையலை  இறுக்கமாக கையை பிடித்துக் கழட்ட அது வரவே மாட்டேன் என்கிறது அப்பொழுது கழட்ட முடியவில்லை என்றதும் கத்தரிக்கோலை எடுத்து வாருங்கள் என்று கூறி அதை கத்தரித்து எடுக்கிறார் இந்த நிகழ்வு ஒரு அரை மணி நேரம் நடக்கிறது. இதை பார்த்த நான் பயந்து போய் எனது கழுத்தில் இருந்த முத்து மாலையை வீட்டிற்குள் ஒரு பெட்டியில் வைத்து விட்டு வந்தேன். ஏனெனில் அப்போது  என்னிடம் இதைக் கேட்டு விடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னாட்களில் என்னால் உணர முடிந்தது இதுபோன்று கிடைத்த பொருட்களை எல்லாம் மக்களுக்காக மக்கள் நல நிதிக்காக தான் சேர்த்துகிறார் என .இந்தியப்  பெண்களிடையே இருந்த நகை பைத்தியம் ஓரளவாவது குறைந்து இருக்கிறது என்றார் காந்தியடிகள் இதுபோன்ற செய்திகளால் தான் என்று அம்புஜம்மாள் பதிவு செய்திருக்கிறார்.

 மிஸ் காதரின் மேயோ என்ற ஆங்கிலேயப் பெண்மணி தேசத்துரோகிகள் போற்றக்கூடிய இந்திய மாதா என்ற
ஒரு புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தியர்களின் குற்றம் குறைகளை நாடெங்கும் பரப்ப வெளியிட்ட புத்தகம் தான் அது. இந்தியர்கள் சுயராஜ்யத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதற்காக பிரச்சாரம் செய்வதற்காகவே அது எழுதப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியடிகள் அதனை சாக்கடை இன்ஸ்பெக்டரின் யாதல்து என்று ஒற்றை வரியில்  விமர்சித்திருந்தார் அப்போதைய காலகட்டத்தில் இந்தியா முழுக்க மக்களிடையே இந்த புத்தகத்தினால் பெரும் மனக் கசப்பும் வருத்தமும் வேதனையும் உருவாகியிருந்தது இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அம்புஜம் காந்தியடிகளிடம் கேட்க நீ முழுவதும் படித்துவிட்டு வா என்று கூறுகிறார் உடனே படித்துவிட்டு வந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவரிடம் காந்தியடிகள் இந்திய ஸ்திரீகள் குறித்து இந்த புத்தகத்தில் இருந்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறார் அதற்கு அம்புஜம்மாள் புத்தகம் முழுக்க நிறைய எதிர்மறையாக இருந்தாலும் சில பகுதிகள் உண்மையை கூறுகின்றனர் இந்திய பெண்களிடையே நாட்டின் மீது பற்றோ சமூகத்திற்காக வேலை செய்யும் நோக்கமும் இல்லாமல் எப்போதும் குடும்பத்திற்காக உழைக்கின்றனர் அவர்கள் படிப்பறிவு இல்லாமல் நிறைய சகோதரிகள் இருக்கின்றனரே என்று வருத்தப்படுகிறார் அதற்கு மகாத்மா சொல்லும் ஆலோசனைகள் நமக்காக நாம் எடுத்துக் கொள்ளலாம் இந்த மாதிரியான சூழலில் ஒரு புத்தகத்தை நாடெங்கும் எதிர்மறையாக பார்க்கும்பொழுது அதிலிருந்து நம்மால் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று சிந்திக்க வைக்கிறார் மகாத்மாகாந்தி எனில் அம்புஜம்மாள் பார்த்து அப்போ சமூகம் மேம்பட சமூக சேவை செய்ய இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமைவது போல அவரை தூண்டுகிறார் மகாத்மாவின் கேள்விதான் அம்புஜம்மாள் இன்று நாம் ஒரு ரோல் மாடலாக பார்ப்பதற்கு விதையாக இருந்தது என்று கூறலாம் ஆம் அந்த புத்தகத்தில் இருப்பது போல பெண்கள் இந்தியாவில் குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டு கல்வி கற்காமல் உம் நாட்டிற்காக சேவை செய்யாமல் இருப்பதை மாற்றுவதற்கு உன்னைப் போன்ற பெண்மணிகள் என்ன செய்யப் போகிறீர்கள் அவற்றை முன்னெடுத்துச் செல் என்று வழிகாட்டுகிறார் ஆகவே இந்த புத்தகத்தைத் தான் அம்புஜம்மாள் தனது பின்னாலேயே சமூகப் பணிக்கான முக்கிய ஆதாரமாக இங்கு பதிவு செய்கிறார் மகாத்மா காந்தி அந்த மூன்று தினங்கள் தங்கள் வீட்டில் தங்கியிருந்து போது நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் இங்கு மிக அழகாக பதிவு செய்கிறார் அம்புஜம்மாள்.

 4 .அன்னையை  அறிந்துகொண்டது என்ற நான்காவது கட்டுரை :1927இல் மகாத்மா இலங்கைக்கு பயணமாக செல்லும்பொழுது சென்னை வருகிறார் அப்பொழுது அன்னை கஸ்தூரிபாய் உடன் வருகிறார், அம்புஜம்மாவிற்கு கஸ்தூரிபா அவர்களுடன் நெருங்கிப்
பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அன்னை கஸ்தூரிபாய் உடன் இருந்த நாட்களை குறித்த அனுபவித்து பகிர்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது .
 அன்னையின் குணாதிசயங்கள் குறித்தும் அவரது காந்தியடிகளுக்காக எப்போதும் பணி செய்வது குறித்தும் இக் கட்டுரையில் குறிப்பிட்டு அவரை போன்ற தலைசிறந்த பெண்மணி பாரத நாட்டில் இல்லை என்ற பதிவை இங்கு தந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவர்கள்.கல்வியறிவு குறைவாக இருந்தாலும் ஆடம்பரமற்ற வாழ்க்கையின் வழியாக  இருதய பண்பாட்டினால் மிகச் சிறந்து விளங்கும் பெண்மணி  கஸ்தூரிபா என்று மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

5.  தர்மசங்கடம் என்ற  கட்டுரையில் கல்கத்தாவில் நடந்த ஸ்பெஷல் காங்கிரஸில் அம்புஜம்மாளின் தந்தை விலகி விடுகிறார் அதோடு தேசிய வாழ்விலிருந்து விலகி எவ்வித பணிகளும்  செய்யாமல் இருக்கிறார்.
ஆனால் அப்பொழுது உப்புசத்தியாகிரகம் நாடெங்கும் மிகவும் அழுத்தமாக நடந்துகொண்டிருந்தது கஸ்தூரிபாய் அன்னியத் துணி கடைகளில் மறியல் செய்து சிறை சென்றார் இவற்றையெல்லாம் கண்ணுற்ற அம்புஜம்மாள் தானும் இயக்கத்தில் ஈடுபட விழைகிறார். அவரது தந்தையோ கதர் வேலை ஹரிஜன முன்னேற்றம் இவற்றால் சிவராசன் கிடைத்துவிடுமா இவை எல்லாம் நல்லது தான் நீ செய் ஆனால் சரியான அரசியல் திட்டத்தால் தான் சுயராஜ்யம் கிடைக்கும். அரசியலுக்கு அழுக்கு பிடித்து விளையாட்டு போல மோசமாக இருக்கின்றது. ஆகவே நீ இவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை வழங்குகிறார் இந்த சூழ்நிலையில் தர்மசங்கடமாக தான் நாட்டிற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருந்தி கட்டுரையை முடித்துள்ளார் அம்புஜம்மாள்.

 6.ஹரிஜன யாத்திரையில் - ஆறாவது கட்டுரையில் ஹரிஜன மக்களுக்காக நாடெங்கும் அவர்களது சமூக மத உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டு தேசம் முழுக்க வரும் பொழுது, மீண்டும் மகாத்மா சென்னைக்கு வருகை புரிகிறார். அப்போது கோடம்பாக்கம் ஹரிஜன கைத்தொழில் கல்விச் சாலையில் தங்கி இருக்கிறார் அவரை அம்புஜம்மாள் சந்தித்து தனது தகப்பனார் காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர் அப்பொழுது காந்தியடிகள் உனது தகப்பனாரை ஏதாவது உன்னால் செய்ய முடியாதா என்று அம்புஜம்மாளை கேட்கிறார். அவரோ என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூற அப்போது நானே நேரில் வருகிறேன் என்று மகாத்மா அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து உரையாற்றுகிறார் ஆனால் அம்புஜம்மாளின் தந்தையோ பிடிவாதமாக அரசியல் வேண்டாம் என்று கூறிவிட ,இந்த சூழ்நிலையில் காந்தியடிகள் அம்மாவிற்கு போனது தகப்பனாரின் பிடிவாதம் அரசியல் வேண்டாம் என்பதால் நீயும் அரசியலுக்குள் வர வேண்டாம் கதர் துண்டு ஹரிஜன சேவை செய்து வந்தால் போதும் என்று கூறிவிட்டு வருகிறார் அந்த அனுபவத்தை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்.
 7. ..என் ஹிந்தி யாத்திரையில் என்ற ஏழாவது கட்டுரையில் 1934 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிந்தி யாத்திரைக்காக டெல்லி டேராடூன் ஹரித்துவார் கான்பூர் அலகாபாத் ஆகிய இடங்களுக்கு அம்புஜம்மாள் தனது தோழிகளுடன் செல்கிறார் .அங்கே ஸ்ரீ சமன்லால் பஜன் பங்களாவில் தங்கி இருந்தார் காந்தியடிகளை அங்கு சந்தித்த பிறகு கல்கத்தா செல்ல இருந்தார் அம்புஜம்மாள் .மஹாதேவ தேசாய் மீரா பென்  பன்வாரிலால் பிரபாவதி அனைவரும் உடன்இருக்க ஒரு ரயிலில்  மகாத்மா காந்தியடிகளும்  பிரயாணம்  செய்திருக்க, அதே ரயிலில் அம்புஜம்மாள் அவர்களும் சென்றார். 

 காந்தி , இறங்க வேண்டிய ரயில் நிறுத்தம் இரவு ஒன்றரை மணிக்கு வரும் படி இருந்தது , அந்த ரயில் நிலையத்தில் இவரை எதிர்த்து சனாதனிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர்.  நள்ளிரவில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ரயிலை விட்டு குதித்து மறைகிறார் எவ்வளவு வீரமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதை காந்தியின் வழி நின்று  இக்கட்டுரையில் மிகவும் தெளிவாக அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.
பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் தேச சேவைகளான ஜமால் பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் காந்தி காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

8. பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் .தேச சேவகிகளான ஜானம்மாள் (பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் ) கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் , மாநாட்டிற்கு காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்

9 .வர்தா ஆசிரம நினைவுகள் 

பம்பாய் காங்கிரசுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் முரண்டு பிடித்து வர்தா ஆசிரிமம்  செல்கிறார் அம்புஜம்மாள். . தந்தையே நேரில் வந்து காந்தியடிகளிடம் ஆசிரமத்தில் இவரை விட்டுச் செல்கின்றார். இவரது தந்தை அழுது இவரை ஆசிரமத்தில் விடும்பொழுது காந்தி, கவலை வேண்டாம் , எனது மகளைப் போல பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே போல மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். சென்னை வீட்டின் வசதியையும் ஆசரம எளிமையும் ஒப்பிட்டு , ஆனால் உள்ளார்ந்த அன்புடன் ஆசிரமத்தில் வாழ்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அங்கு நிலவிய உணவு முறை ,வேலைப் பகிர்வு , பிரார்த்தனை ஏற்பாடு , நூல் நூற்பு , காந்தியின் அரசியல் பணிகள் , கடிதப்பணி , நடைப் பயற்சியிலேயே ஆசிரமத்திற்கு ரோடு போட கல் பொறுக்கியது என தொடர்ந்து பல அழகான அனுபவங்களைத் தொகுத்துள்ளார். 

10. மகாத்மாவின் துணைவி 

இந்தக் கட்டுரையை ஒற்றை வரியில் கூற வேண்டுமெனில் , மகாத்மா என்ற மாபெரும் மனிதர் குறித்து நாம் பேசும் போது கஸ்தூரிபா இல்லையெனில் மகாத்மா நாட்டின் அனைத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்க முடியுமா என சிந்திக்க வைக்கிறார். 

இதே போல காந்தி பக்தர்களைச் சந்தித்தது , சேவாக் கிரம நினைவுகள் , 74 வயதில் 21 நாள் பட்டினி என தொடர்ந்த அனைத்து கட்டுரைகளிலும் காந்தியுடனான தனது நிறைய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். 

இன்றைய கால கட்ட சமூகப் போக்கில் மாற்றங்களைத் தந்து பல நல்ல நெறிமுறைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் காந்தியத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். அப்படியான புத்தகம் இது. அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய நூல். 

உமா 





No comments:

Post a Comment