Thursday 18 March 2021

தசாவதாரம்

அறிஞர் அண்ணா எழுதிய எளிய  தமிழ் நாவலான இந்த  தசாவதாரம் என்ற நூலை ,கிண்டில் பதிப்பில் வாசித்தேன். கமலின் தசாவதாரம் திரைப்படம் குறித்து எல்லோரும் அறிவோம் . 

ஆனால் இது அறிஞர் அண்ணா எழுதிய நாவல் . ஒரு பகுதி திரில்லர் மாதிரியும் ஒரு பகுதி குடும்ப நாவல் போலவும் தோன்றுகிறது. பத்திரிகை துறை , காவல் துறை , வழக்கறிஞர் , திருடர்கள் , கோயில் நகை திருட்டு எனக் கலவையான நாவல். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் தன் தங்கை விரும்பி மணந்தவனை கோயில்  நகை திருட்டு எனப் பழி வருமாறு திட்டமிடும் பெரிய மனிதர் போர்வை . முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞன் இதை செய்திருக்க மாட்டான் என நம்பிக்கை இருந்தாலும் சாட்சியங்களால் ஆதாரங்களுடன் கைது செய்யும் காவல் துறை . இந்த குற்றத்தில் இருந்து சூடாமணியின் காதல் கணவர் தேவர் எப்படி விடுபடுகிறார் என்பதே தசாவதாரம். 

எழுத்து நடை தனித் தமிழ் உரையாடலாக 60 வருடங்கள் முன்பு வந்த திரைப்பட வசனங்கள் போல நீள்கின்றன. இந்த நாவலை அப்படியே திரைக் கதை ஆக்கலாம் . கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சமூக யதார்த்தம் , பெரிய மனிதர் போர்வையில் செய்யும் சில கள்ள செயல்கள் , காவல் துறையில் இருக்கும் சின்ன சறுக்கல் இப்படி நாவல் அனைத்தையும் உள்ளடக்கி பத்து அவதாரங்களை முக்கியமாக பேச வைத்துள்ளது.

No comments:

Post a Comment