Wednesday 6 February 2019

காப்புரிமை

நவம்பர் 21 / 2018

         நவம்பர் மாத மாலை அது.....
ஒரு புயலின் அடை மழை நாள். மாலை 6 மணிக்கே கும்மிருட்டாய் இருந்தது எழும்பூர் சாலை , கன்னிமாரா நூலகத்தின் எதிரே இக் ஷா மையத்தில் நுழைந்தேன் , உள்ளே பிரளயன்  தோழர் இன்னும் சிலர் மட்டுமே இருந்தனர்.

அப்போதும் வெளியே சோ.... என மழை தொடர்ந்தது. தோழர் முத்து  , தோழர் ரோஹினி , தோழர் நக்கீரன் கோபால் , தீக்கதிர் புகைப்பட கலைஞர் ஜாஃபர் அண்ணா இவர்கள் மட்டுமே எனக்கு கொஞ்சம் அறிமுகமானவர்கள்  , கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் பேச நேரம் கிடைத்தது.

நான் சில நண்பர்களை எதிர்பார்த்தும் சென்றிருந்தேன். அவர்களால் வர இயலவில்லை.

அது ஒரு மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு விழா , கொஞ்ச நாட்கள் முன்னால் தான் கருத்துரிமை பற்றிய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

அதையடுத்து ... காப்புரிமை என்ற சொல் தான் என்னை ஈர்த்திருந்தது ,
இந்த விழாவின் மையம் , காப்புரிமை கொத்தவால் என்ற இந் நூலின் மொழிபெயர்ப்பாளர் நாடகப் பிதாமகர் என்று கூறப்படும் பிரளயன் Pralayan Shanmugasundaram Chandrasekaran
என்பதாலேயும் அவரது அழைப்பிற்கிணங்க சென்றேன்.

இது ஒரு விழிப்புணர்வு நூல் , நாடகச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளுக்கான கையேடு , பிரித்வி தியேட்டர் குழுவின் முன்னெடுப்பாக ,
இந்தியா தியேட்டர் ஃபாரம் வெளியிட்டுள்ள நூல் .

இது பற்றி பேசிய பொழுது ஒவ்வொருவரும் அவரவர் சொந்த அனுபவத்தில் காப்புரிமை எவ்வாறு மற்றவரால் எல்லை மீறப்பட்டது என்று பகிர்ந்து கொண்டதிலிருந்து இந்நூலைப் புரிந்து கொள்ள ஆரம்பமாகப் பார்த்தேன் நான்.

தேவிகா என்பவர் ஆரம்பத்தில் ரொம்ப நேரம் இப்புத்தகத் தயாரிப்பு பற்றிய 10 வருட அனுபவத்தைப் பற்றி பேசினார்.

தான் எழுதியவற்றை எந்த மாற்றமும் இல்லாமல்  அனுமதி கேட்காமல் வேறு பத்திரிகையில் வந்த கதையைப் பகிர்ந்தார் மூத்த பத்திரிகையாளர் தோழர் குமரேசன் Kumaresan Asak.கார்ப்பரேட்டுகளுக்காக உருவாக்கப்பட்டது தான் என எனக்கான புரிதல்.

எனது முகநூல் பதிவுகள் பலரும் பெயர் இல்லாமல் , வேறு பெயரில் வெளியிடுகின்றனர். தீக்கதிரில் நான் எழுதிய அதே கட்டுரை தினமணியில் அப்படியே வந்தது ... என வேடிக்கையாகவும் வேதனையாகவும் .... Copy left ஆக வேண்டுமென்றால்  Copy right என்றால் என்ன என்பதை அறிந்து இருக்க வேண்டும் என்கிறார்.
அனைவருக்குமான உணர்வாக சமூகத்தின் சொத்து என்பது வரவேண்டும் என்கிறார்.

தமிழின் முதல் நாடகம் இந்திரா பார்த்த சாரதியின் நாடகம் தான் 1970 இல் மழை ... கலை இலக்கிய வெளி மிகக் குறுகிய வெளி , இங்கு தான் சண்டை வருகிறது.

பிரளயன் நாடகம் ஆந்திராவில்  மொழி பெயர்க்கப்பட்டு இவரை அழைத்து பெருமைப் படுத்துகிறார். அவரும் மிக்க மகிழ்ச்சி என்கிறார். விட்டுக் கொடுத்து விடுகிறார். இது தான் இன்றைய நிலை என்றார் தேவேந்திர பூபதி  கவிஞர் .

எவரும் சுயம்பு இல்லை .. சமூகத்தில் கிடைக்கும் அனைத்தும் சமூகத்திற்கே சொந்தம் , ஆனால் ஒரு படைப்பாளியின் கண்ணோட்டம் சார்ந்து காப்புரிமை கொள்ளலாம். புதுமைப் பித்தன் , புலமைப் பித்தன் பற்றிய 2001 வழக்கு பற்றிக் குறிப்பிட்டு  ....பேசுகிறார் தோழர் முத்து R T Muthu .

நக்கீரன் கோபால் பேசும் போது , எந்திரன் - சர்க்கார் பற்றி பேசி  87 பக்கம் இப்புத்தகத்தில் வைத்துப் பேசினார்.

சினிமாவில் புகைப்படங்களை கேட்காம எடுப்பார்கள் , ரகுவரன் அவர்களது
ஃபோட்டோவை எல்லாரும் பயன்படுத்து வாங்க , யாரும் அனுமதி கேட்டதில்ல , ஆனா ஒரு இயக்குநர் அனுமதி கேட்டார் ... என்ற அனுபவத்தைப் பகிர்கிறார் தோழர் ரோகினி Rohini Molleti

இப்படியாக இன்னும் சிலர் பேச ,

Copy right
Copy left
Copy south
Creative Commense
அறம் சார்ந்த நிலைப்பாடு எடுக்க வேண்டும் ,பொருளாதார உரிமை
தார்மீக உரிமை (அ) ஆக்கிய உரிமை ,
இப்புத்தகம் காப்புரிமைக் கு எதிரானதா (அ) உடன்பாடாததா ... என்ற கேள்வி வர வேண்டும் என்கிறார் பிரளயன் .

MIT all research papers உம் Open Source ஆக்கிய ஒரு முக்கியமானவர் பற்றி பேசியதும்  ....அவர் தற்கொலை ... கட்டற்ற மென்பொருள் பற்றிய அரசியல் மாறுபாடு ஏற்பட்டுள்ளது பற்றியும் கூறி .

இந்தியா தியேட்டர் பாரம் எடுத்த ப்ராஜக்ட் - உயிர் வாழும் கதைகள் (நாடகம் நடிப்பவர்) பதிவு செய்ய ஒரு கையேடு தயாரித்தது.
மலையாளம் , மராத்தி , பெங்காலி , இந்தி , கன்னடம் ,தமிழ் - 6 மொழியில் வெளியிட்டு இருக்கோம், அதுவே இப்புத்தகம் என்றார் , பிரளயன் தனது ஏற்புரையில்  .

புத்தகத்தைப் பற்றி எழுத நினைத்தேன். அது இன்னொரு முறை தான் எழுத வேண்டும்.

ஏனோ இவற்றை மட்டுமே எழுதத் தோன்றியது.

அதே பிசுபிசுக்கும் சற்றே வேக  மழை , அங்கிருந்து கிளம்பினேன்.

ரொம்ப நாளாக மனதின் ஓரம் இது பற்றிய நினைவுகளுடன் , எழுதத் தோன்றியபடியே இருந்ததால் ..... இந்தப் பதிவு

உமா