Wednesday, 2 September 2020

பூம்புகாருக்குப் போவோம்

பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் 

இந்த நூல் புஷ்பா அசோக்குமார் அவர்களால் எழுதப்பட்டு முதற் பதிப்பு 1987 இல் விலை 4 ரூபாயாக முகில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு 

உள்ளது . 

 பூம்புகார் என்று சொன்னால் நமக்கு  ஒருபுறம் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் இவர்களெல்லாம் மனதுக்குள் வந்து போவார்கள் .இன்றைய தலைமுறைக்கு பூம்புகார் என்பது , நகர வாழ் மக்கள் அனைவருக்கும் அது ஒரு பொருள் விற்கும் கடை, பூம்புகார் என்று தலைப்பிட்டு உள்ளே விலை உயர்ந்த முத்து பவளம் போன்ற ஆபரணங்களும்  பித்தளை, செம்பு போன்ற உலோகப் பொருட்கள், சிலைகள் விற்கும் கடையாகவேத் தெரியும் .பூம்புகார் என்றதும் நினைவுக்கு வர வேண்டிய சிலப்பதிகாரம் என்பது கூட இன்று மாணவர்களுக்கு வெறும் மதிப்பெண்கள் சார்ந்த வினாவாக விடையாக மாறிவிட்டது ஒருபுறம் அவலம் . 

காவிரிப் பூம்பட்டினம் , கரிகாலன் கட்டிய கல்லணை இது போன்ற தகவல்களும் அங்கு இருக்கக்கூடிய கண்ணகி சிலை இதுபோன்ற சின்ன குறிப்புகள் மட்டுமே இன்றைய தலைமுறையினர் அறிந்து வைத்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். 

அங்கே சுற்றுலா செல்லும் பொழுது, மன்றங்கள் இருக்கும் , சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சிலையாக நிற்பார், பாவை மன்றம் இருக்கும் ,இலஞ்சி மன்றம் இருக்கும் நெடுங்கல் நின்ற மன்றமும் இருக்கும் காவிரி அணையும் சிலை வடிவாக இருக்கும் இதைத்தவிர அழகுக்காக சிப்பி வீடுகள் இருக்கும்.ஆனால் எதனையும் இதெல்லாம் எதற்காக அமைக்கப்பட்டது என்ற வரலாறு குறிப்பு எங்கும் இருக்காது என்று நான் கருதுகிறேன் 

ஆனால் பூம்புகார் என்பதற்கு என்ன வரலாறு என்பது சென்ற தலைமுறையினருக்கு  சிலப்பதிகாரம் வாசித்து வளர்ந்தவர்களுக்கும் நன்றாக தெரியும் .பூம்புகார் எப்படி எல்லாம் வளங்களால் நிறைந்த ஒரு அற்புத நகரமாக இருந்திருக்கிறது என்பதை வலுப்படுத்தவே இந்தச்  சிறுநூல் நமக்கு சொல்கிறது. பழைய பூம்புகாரின் இலக்கிய வரலாறுகளில் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது. பூம்புகாரை பற்றி அறியாமல் சென்றால் அது ஒரு கேளிக்கை உல்லாசம் சுற்றுலாத்தலம் அவ்வளவுதான் ஆனால் பூம்புகாருக்கு பின்னால் உள்ள வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது

 இந்த நூல்  பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளது .அதாவது பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் …..என்று ஆரம்பித்து பூம்புகார் எப்படிப் பெயர் காரணம் வந்திருக்கும் என்று வரலாற்று ரீதியாகவும் இலக்கியமும் புராணமும் எவ்வாறு விளக்குகின்றன என்ற முறையிலும்  அணுகி இருக்கிறார் ஆசிரியர்.

காவிரிப்பூம்பட்டினம் என்று எப்படி பெயர் வந்திருக்கலாம் ஒரு காலத்தில் பூம்புகார் என்றாலும் காவிரிப்பூம்பட்டினம் என்றாலும் என்று இலக்கியம் சார்ந்தும் புராணம் சார்ந்தும் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார் .

அங்கே அகத்திய முனிவர் வருகிறார் சிவபெருமான் வருகிறார் பூதங்கள் வருகின்றன அதற்கப்புறம் அரக்கர்கள் ,ஆறு ,அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட்டு அதிலுள்ள நீர் ஆறாக பெருகி இப்படியான பல கதைகள்  இருக்கின்றன . விநாயகர் வருகிறார்,

முனிவர்கள் தவம் இருப்பது இதுபோல் காட்சிகள் வழியே இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள சில பதிவுகளை வைத்து பெயர்க்காரணம் வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்ற தகவலை நூலாசிரியர் கூறுகிறார்.

 மணிமேகலையில் கூறும் பெயர் வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார் அக்னி புராணம் கூறும் பெயர் வரலாற்றின் கூறுகிறார் அங்கு மகா விஷ்ணு வருகிறார் .தவிர முனிவர், பெண், நதி இப்படி  பல தகவல்கள் வருகிறது

ஆகவே பெயர் வரலாறு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களை நூலாசிரியர் இங்கு பதிவு செய்கிறார்.

 ஆற்றின் முகத்தில் புகுந்து பெரிய கப்பல் என்று விளக்குகிறது புறநானூறு. புகார் என்னும் பெயரில் உண்மையாக ஆராய்ச்சி செய்தால்…. அங்கு வாழ்பவர்கள் எவரும் எந்த பொருளையும் விரும்பி பிற ஊர்களில் போக மாட்டார்கள் என்பதை மற்றவர்க்கு தெரிவிக்க புகார் என்றும் குறித்தனர் என்றும் சொல்லி இருக்கின்றனர். அதேபோல் இந்த ஊருக்குள் படையெடுக்கும் வேற்று மன்னர்கள் அஞ்சிப் ,   'புகார்' என்றும் அழகான நகரம் இது ஆகையினால் பூம்புகார் என்றும் சொல்லப்படுவதுண்டு என்றும் பலவாறு இதற்கான பெயர் காரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய பூம்புகாரின் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறும்  தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் அறுபதினாயிரம் குடிமக்கள் என்று குறிப்பிடுகின்றனர் அப்போது கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல . பூம்புகாரில் வாழ்ந்த அத்தனை மக்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்.

 அதற்காக சிலப்பதிகாரம் அழகான ஒரு பாடலைத் தருவதை இங்கு உங்களுக்காகத் தருகிறேன் . 

திருவின் செல்வியோடு   பெருநில மடந்தையை

 ஒருதனி யாண்ட செருவடு    திண்டோள்

 கரிகாற் பெரும்பெயர்த்  திருமா வளவனைப் பாலை பாடிய பரிசிலன்   றெடுத்த

மாலைத் தாகி யவளங்கெழு செல்வத்து 

ஆறைந் திரட்டியும் ஆயிரம் கொடிகளும் 

வீறுசால் ஞாலத்து வியல் அணியாகி உயர்ந்தோர் உலகில் பயந்தரு தான் மும் 

இல்லது    மிரப்பு நல்லோர் குழுவும் 

தெய்வத் தானமும் திருந்திய பூமியும் 

ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும் விண்ணவர் உலகின் நண்ணிடு  நகரமொடு எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த 

என்று அன்றைய பூம்புகார் பற்றி  இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல , வெளிநாட்டார் குறிப்புகளும் இதை நமக்கு உண்மையாக்குகிறது. 

கிபி முதலாம் நூற்றாண்டில் மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த யவன ஆசிரியர் தாலமி என்பவரும் , மேல் நாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் என்ற நூலிலும் பூம்புகாரின் வளமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு விரிந்து கிடக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.

பூம்புகாரை ஆண்ட புகழ்வாய்ந்த மன்னன் பற்றி கூறும் பொழுது நமக்கு கரிகால் பெருவளத்தான் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. கரிகாலன் பெருமையை பல்வேறுபட்ட இலக்கிய நூல்களும் புகழ்ந்து பேசுவதையும் இங்கு  குறிப்பிட்டுள்ளனர் .சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கரிகாலன் குறித்து நிறைய சிறப்புகளை கூறியுள்ளார் .

நாம் இங்கு கவனிக்கவேண்டியது அந்த மன்னன் தன்னுடைய ஆட்சியில் நாடு என்றென்றும் பஞ்சத்தினால் பரிதவிக்க கூடாது என்ற விரிந்த நோக்கும் தொலைநோக்குப் பார்வையும்  இருந்ததனால் என்னவெல்லாம் செய்தார், என்று குறிப்புகள் உள்ளன.

 இந்த மன்னனின் ஆட்சியை நாம் படிக்கும் பொழுது இன்றைய நமது சமூகத்தின் அரசியல் நமது நாட்டின் ஆட்சி இவையெல்லாம் நம் கண்முன்னே வந்து போகின்றன அதுவும் குறிப்பாக இன்று இந்த வைரஸ் தொற்றால் நாம் அனைவரும் அவதியுற்று வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு இன்றைய சூழலையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழகத்தில் பூம்புகார் என்ற பகுதியில் ஒரு மன்னன் எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும்   பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்களுக்காக எடுத்துள்ளான் என்பதையும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

 கரிகாலன் பொருட்டு பல பெருமையான விஷயங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.  கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஜெயங்கொண்டார் தம்முடைய கலிங்கத்துப்பரணியில் கரிகாலன் பற்றித் தந்துள்ள  குறிப்புகளும் , ஒட்டக்கூத்தர் பிள்ளைத்தமிழில் கரிகால்வளவன் கொடைச் சிறப்பை எவ்வாறு பாராட்டியுள்ளார் என்பதற்கான தரவுகள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம் என்பது என்ன என்பதற்காகவே ஒரு தலைப்பில் சில பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .அந்த பட்டினபாக்கம்  பிரம்மாண்டமான ஒரு நகரமாக இருந்திருக்கிறது .இங்கு அமைச்சர்களுக்கான வீடுகள், படைத்தலைவர்க்கான மாளிகைகள், அரசாங்கத்தை பணிபுரிபவருக்கான  இருப்பிடங்கள் ,பெரிய வர்த்தக துறையில் அங்கம் வகித்தவர்களுக்கு வீடுகள் உழவுத் தொழிலை வளப்படுத்தும் வேளாளர் பெருமக்கள் இல்லங்கள் , அரண்மனை, அரண்மனையைச் சூழ்ந்துள்ள ராஜபாட்டை, அங்கங்கே ஆலயங்கள், பரந்தாமன் கோவில், சூரபதுமனுக்கான  தனிக்கோயில், ஈஸ்வரன் கோவில் இப்படி பலவகையான கட்டமைப்புக்கள் உடன் பெற்ற நகரமாக பட்டினப்பாக்கம் இருந்திருப்பதை சிலப்பதிகாரம் அழகான பாடல் வழியே வெளிப்படுத்துகிறது .

 பூம்புகார் நகரம்  இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது ஒன்று பட்டினபாக்கம் மற்றொன்று மருவூர்ப்பாக்கம்.  ஏற்கனவே கூறிய நகரமைப்பு பட்டினப்பாக்கத்தில் உள்ளதோடு மறுபக்கத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் பரதவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் மற்றவர்கள் கலந்துரையாட தக்க வகையில் கடற்கரையை ஒட்டிய கிழக்கு பகுதி மருவூர்ப்பாக்கம் என்று அழகாக பிரித்துள்ளனர்.

நாளங்காடி என்பது பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளனர்.இதை பற்றியும் அழகாக விளக்குகிறது சிலப்பதிகாரம் . பட்டின பாக்கத்திலும் மருவூர்ப் பாக்கத்திலும் வாழ்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டும் பொருட்களை  வாங்கிக்கொள்ளும் பொருட்டு பகல் நேரத்தில் செயல்படக்கூடிய கடைகள் இருந்திருக்கின்றன .அவற்றிற்குப் பெயர்தான் நாளங்காடிகள் என்று அழகாகக் கூறியிருக்கின்றனர் .

ஒவ்வொன்றிற்கும் பொருள்பட இந்த நூலில் விளக்கம் கொடுத்துள்ளனர் பூம்புகாரில் ஐந்து வனங்கள் இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றும் எதற்காக பயன்பட்டன என்ற குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் வாசிக்கும் பொழுது சற்று பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. இங்கு  குறிப்பிடப்பட்டவை பெரும்பாலும் உண்மையை தகவல்களாகவே இருக்குமென நம்புகிறேன் .

சற்றே.. கூடக் குறைய இருந்தாலும் இவ்வளவு வளம் பொருந்திய  நாட்டை கொண்ட பகுதி எல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது என்பது வியப்பே .

 பூம்புகார் ஐவகை மன்றங்கள் குறித்தும் ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க .வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் நின்ற மன்றமும் , பூத சதுக்கம்,  பாவை மன்றம் என்று இன்று நம்மூர்களில் நாம் பார்க்கும் பூம்புகார் கடைகளில் இருக்கின்றன அல்லவா அந்த அமைப்பில் இருக்கக் கூடியவை தான், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களும் உள்நாட்டு வியாபாரம் செய்யக்கூடிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடம் தான் வெள்ளிடை  மன்றம் என்று குறிப்புகள் உள்ளன ரொம்ப அழகாக இருக்கிறது ஒவ்வொரு விஷயமும்.

யாருக்குப் பயன் தருகிறதோ இல்லையோ தமிழ் குறித்தும் வரலாறு குறித்தும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும். அதே போல நமது வரலாறுகளையும் இலக்கியங்களையும் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

பல வருடங்களுக்கு முன்பு சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் நான் படித்ததினால் தமிழ் பாடமும் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சி என்று அந்த காலகட்டங்களில் முடிந்து விட்டதனால் இந்த புத்தகத்தை நான் விரும்பித்தான் படித்தேன் ரொம்ப அழகான புத்தகம்.

உமா

உனக்குப் படிக்கத் தெரியாது

உனக்குப் படிக்கத் தெரியாது

நூலாசிரியர் : கமலாலயன்  

வாசல் பதிப்பகம் வெளியிட்ட இந்த உனக்குப் படிக்கத் தெரியாது புத்தகம் 2011  இல்

வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு சொல் ஒரு குழந்தையை எப்படி பாதித்து உலகத்திற்கே உதாரண மனுஷியாக  அக்குழந்தையை உயர்த்தியுள்ளது என்ற வரலாறு தான் இது. 

ஆயிரத்து எண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பித்து 1950க்குள் உலகின் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு மாதிரியான நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளதை நம்மால் இணைத்துப் பார்க்க முடிகிறது. 

தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ளும்  அமெரிக்காவுக்கு , தன்னைக் கட்டி எழுப்பியவர்களே அங்கு  வாழும் கறுப்பினத்தோர் என்பது மறந்து அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் பாகுபாடும் வலுத்த நாட்கள் தான் இப்படி ஒரு கறுப்பினத் தலைவர்கள் உருவாகவும் காரணமாக இருந்திருக்கின்றது. 

ஏகாதிபத்ய நாடான அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் எவ்வாறெல்லாம் வெள்ளை இனத்தால் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பதை உருக்கமாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம் . 

மேரி மெக்லியாட் பெத்யூன் தான் அந்தக் குழந்தை , பருத்திக் காட்டில் தன் 10 வயது வரை  கறுப்பின மக்களில் ஒருவராக விவசாயம் மட்டுமே செய்து வருவதும் , மேரியைப் போன்ற எந்தக் குழந்தைக்கும் அது கறுப்பினமாக இருக்கும் பட்சத்தில் கல்வி மறுக்கப்படுவது என்பதும் எத்தகைய  வரலாற்றின் துயரம் என்பதை இப்புத்தகப் பக்கங்களால் நம்மால் அறிய முடிகிறது .

இப்போது கல்வி குறித்தான பல பரிமாணங்கள் பற்றி பேசுகிறோம் . அனைவருக்கும் பொதுவான கல்வி , மெய்நிகர் வகுப்பறைகள் ( Virtual Class room) என நம் பார்வை விரிந்துள்ளது. ஆனால் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு நம் இந்தியாவிலும் கல்வி மறுக்கப்படும் சூழல் இருந்தது உண்மை தான். ஆனால் 1800களில் இங்கு பெண் கல்விக்காக ஒரு சாவித்திரி பாய் பூலே என்பதும் அமெரிக்காவில் கறுப்பினக் குழந்தைகளின் கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மேரி மெக்லியோட் பெத்யூனும் , எனது பார்வையில் ஒரே நேர்க்கோட்டில்  இணையாக நிற்பதாகத் தோன்றுகிறது. 

தன் தாயுடன் துவைத்து தேய்த்த துணிகளைக் கொண்டு சென்று வெள்ளையர் வீட்டில் தருகையில் , அங்கிருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த கருப்பினக் குழந்தை மேரியின் கைகளில் இருந்து அதைப் பிடுங்கியதோடு , அந்த வெள்ளையர் குழந்தை "உனக்குப் படிக்கத் தெரியாது"  எனக் கூறியது தான் மேரியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. 

அந்தப் புத்தகமும்  , உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளும் மேரியின் காதுகளில் வாழ்க்கை முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது உலகின் எந்தக் கருப்பினக் குழந்தையும் இந்த சொற்களை தங்கள் வாழ்க்கையில் யாரிடமிருந்தும் கேட்டு விடக் கூடாது என்ற அச்சத்திலும் வலியிலும் மேரி தன் கனவுகளைக் கட்டி எழுப்பி நனவாக்க உழைப்பைக் கொட்டிக் கொடுக்கிறார். 

12 வயது சிறுமி முதன் முதலில் ரயில் பயணம் கல்வி கற்கும் பொருட்டு மேற்கொள்ளும் தருணத்தில் ஊர் மக்கள் முழுவதும் தங்கள் இனத்திலிருந்து முதலில் படிக்கப் போகும் பெண்ணை வாழ்த்தி அனுப்புவது முதல் , ஸ்காட்டியாவில் மேரி தனது தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியின் அறைகளை , உணவு உண்ணும் தட்டு , ஸ்பூன் முதற்கொண்டு வித்யாசமாகப் பார்ப்பதும் என காட்சிகள் மனதில் ஆழமான பதிவுகளைத் தருகின்றன. 

போட்டோ சானில் ரயில் பெட்டி வகுப்பறைகளைப் பார்த்திருப்போம் , முதல் ஆசிரியரில் குதிரைக் கொட்டகை வகுப்பறைகளைப் பார்த்திருப்போம் .

இங்கு குப்பைக் கொட்டுமிடத்தை பள்ளியாக மாற்றும் மேரி மெக்லியோட்டின் உழைப்பு நம்மை அணு அணுவாகச் சித்ரவதை செய்கிறது. பொதுக் கல்விக்கான பள்ளிகள் இருந்தும் கறுப்பினக் குழந்தைகளுக்கு என பள்ளியே இல்லாத சூழல் தான் மேரியை இப்படி இயங்க வைக்கிறது. 

இப்படிக் கூட ஒருவர் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளுக்காக உழைக்க முடியுமா என்று நமக்குள் ஒரு குரல் ஒலித்துக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 5 கருப்பின க் குழந்தைகளுடன் தாய்தோனா கடற்கரை நகரின் ஒரு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது பள்ளியைத் துவக்கிய மேரி , 

அடுத்த நிலையாக சொந்தமான கட்டிடத்தில் குப்பை கொட்டும் இடத்தை விலைக்கு வாங்கி நூற்றுக்கணக்கான கருப்பின மாணவர்களின் கல்விக் கனவை  எவ்வாறு நிறைவேற்றுகிறார் , தாய் தோனா கல்வி தொழிற்பயிற்சிப் பள்ளி , கருப்பின மாணவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை உருவாக்கம் என அவரது அர்ப்பணிப்பும் சேவையும் விரிகிறது. 

இவற்றின் ஒவ்வொரு நகர்வுக்கும் மேரி கையேந்தி புரவலர்களைக் கண்டறிந்து தான் செயல்படுத்துகிறார்.  மேரியின் பணிகளைப் பார்க்கும் போது , நோயாளிகளுக்காகக் கையேந்திய அன்னை தெரசாவின் நினைவையேக் கொண்டு வருகிறது நம் கண் முன்னால் . 

ஒரு முறை கரீபியன் கடல் தீவான ஹைட்டியின் ஜனாதிபதி,  மேரி பெத் யூனை தங்களது தீவில் 10 நாட்கள் செலவழிக்க வேண்டுகோள் விடுத்து 1949 இல் பெத் யூன் ஹைட்டி போய்ச் சேர , வழியெல்லாம் மக்கள் கூட்டம் நிறைந்து வாழ்ச்சியிருக்கின்றனர். 

பருத்திக் காட்டில் பயிர் செய்த ஒரு மாணவி 60 வருடங்களில் தன் இனத்திற்காக  , உலகின் அனைத்துப் பகுதிகளின் ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கைக்குச் செறிவை ஊட்டும் ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து 1955 இல் உயிர் விட்ட கதை தான் இந்தப் புத்தகம் .

இவர் இறப்பதற்கு ஒரு ஆண்டு முன்பு அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் பிரகடனமாக அறிவித்தது. ஆம்  'பொதுப் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் , வெள்ளையினக் குழந்தைகளையும் கருப்பினக் குழந்தைகளையும் தனித்தனிப் பள்ளிக்கு அனுப்பும் படி நிர்ப்பந்திப்பதும் சட்டவிரோதம் என்பதே அந்தத் தீர்ப்பு. 

வரலாற்றின் பக்கங்களில் உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளின் வலிமையை நேர்மறையாக  பிரம்மாண்டமான மாற்றத்தை உருவாக்கியப் பெண்மணியாக மேரி மேக்லியட் பெத்யூன் நம் மனதில் நிற்கிறார். 

புறக்கணிப்பு என்ற சொல்லுக்கான வலிமையை இந் நூலைப் படிக்கும் எல்லோருக்கும்  கற்றுக் கொடுக்கும் இப்புத்தகம் ஒரு வரலாற்று சாசனம்.

 உமா

பூம்புகாருக்குப் போவோம்

பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் 

இந்த நூல் புஷ்பா அசோக்குமார் அவர்களால் எழுதப்பட்டு முதற் பதிப்பு 1987 இல் விலை 4 ரூபாயாக முகில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு 

உள்ளது . 

 பூம்புகார் என்று சொன்னால் நமக்கு  ஒருபுறம் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் இவர்களெல்லாம் மனதுக்குள் வந்து போவார்கள் .இன்றைய தலைமுறைக்கு பூம்புகார் என்பது , நகர வாழ் மக்கள் அனைவருக்கும் அது ஒரு பொருள் விற்கும் கடை, பூம்புகார் என்று தலைப்பிட்டு உள்ளே விலை உயர்ந்த முத்து பவளம் போன்ற ஆபரணங்களும்  பித்தளை, செம்பு போன்ற உலோகப் பொருட்கள், சிலைகள் விற்கும் கடையாகவேத் தெரியும் .பூம்புகார் என்றதும் நினைவுக்கு வர வேண்டிய சிலப்பதிகாரம் என்பது கூட இன்று மாணவர்களுக்கு வெறும் மதிப்பெண்கள் சார்ந்த வினாவாக விடையாக மாறிவிட்டது ஒருபுறம் அவலம் . 

காவிரிப் பூம்பட்டினம் , கரிகாலன் கட்டிய கல்லணை இது போன்ற தகவல்களும் அங்கு இருக்கக்கூடிய கண்ணகி சிலை இதுபோன்ற சின்ன குறிப்புகள் மட்டுமே இன்றைய தலைமுறையினர் அறிந்து வைத்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். 

அங்கே சுற்றுலா செல்லும் பொழுது, மன்றங்கள் இருக்கும் , சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சிலையாக நிற்பார், பாவை மன்றம் இருக்கும் ,இலஞ்சி மன்றம் இருக்கும் நெடுங்கல் நின்ற மன்றமும் இருக்கும் காவிரி அணையும் சிலை வடிவாக இருக்கும் இதைத்தவிர அழகுக்காக சிப்பி வீடுகள் இருக்கும்.ஆனால் எதனையும் இதெல்லாம் எதற்காக அமைக்கப்பட்டது என்ற வரலாறு குறிப்பு எங்கும் இருக்காது என்று நான் கருதுகிறேன் 

ஆனால் பூம்புகார் என்பதற்கு என்ன வரலாறு என்பது சென்ற தலைமுறையினருக்கு  சிலப்பதிகாரம் வாசித்து வளர்ந்தவர்களுக்கும் நன்றாக தெரியும் .பூம்புகார் எப்படி எல்லாம் வளங்களால் நிறைந்த ஒரு அற்புத நகரமாக இருந்திருக்கிறது என்பதை வலுப்படுத்தவே இந்தச்  சிறுநூல் நமக்கு சொல்கிறது. பழைய பூம்புகாரின் இலக்கிய வரலாறுகளில் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது. பூம்புகாரை பற்றி அறியாமல் சென்றால் அது ஒரு கேளிக்கை உல்லாசம் சுற்றுலாத்தலம் அவ்வளவுதான் ஆனால் பூம்புகாருக்கு பின்னால் உள்ள வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது

 இந்த நூல்  பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளது .அதாவது பூம்புகாருக்கு போவோம் வாருங்கள் …..என்று ஆரம்பித்து பூம்புகார் எப்படிப் பெயர் காரணம் வந்திருக்கும் என்று வரலாற்று ரீதியாகவும் இலக்கியமும் புராணமும் எவ்வாறு விளக்குகின்றன என்ற முறையிலும்  அணுகி இருக்கிறார் ஆசிரியர்.

காவிரிப்பூம்பட்டினம் என்று எப்படி பெயர் வந்திருக்கலாம் ஒரு காலத்தில் பூம்புகார் என்றாலும் காவிரிப்பூம்பட்டினம் என்றாலும் என்று இலக்கியம் சார்ந்தும் புராணம் சார்ந்தும் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார் .

அங்கே அகத்திய முனிவர் வருகிறார் சிவபெருமான் வருகிறார் பூதங்கள் வருகின்றன அதற்கப்புறம் அரக்கர்கள் ,ஆறு ,அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட்டு அதிலுள்ள நீர் ஆறாக பெருகி இப்படியான பல கதைகள்  இருக்கின்றன . விநாயகர் வருகிறார்,

முனிவர்கள் தவம் இருப்பது இதுபோல் காட்சிகள் வழியே இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள சில பதிவுகளை வைத்து பெயர்க்காரணம் வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்ற தகவலை நூலாசிரியர் கூறுகிறார்.

 மணிமேகலையில் கூறும் பெயர் வரலாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார் அக்னி புராணம் கூறும் பெயர் வரலாற்றின் கூறுகிறார் அங்கு மகா விஷ்ணு வருகிறார் .தவிர முனிவர், பெண், நதி இப்படி  பல தகவல்கள் வருகிறது

ஆகவே பெயர் வரலாறு குறித்த பல்வேறு அபிப்பிராயங்களை நூலாசிரியர் இங்கு பதிவு செய்கிறார்.

 ஆற்றின் முகத்தில் புகுந்து பெரிய கப்பல் என்று விளக்குகிறது புறநானூறு. புகார் என்னும் பெயரில் உண்மையாக ஆராய்ச்சி செய்தால்…. அங்கு வாழ்பவர்கள் எவரும் எந்த பொருளையும் விரும்பி பிற ஊர்களில் போக மாட்டார்கள் என்பதை மற்றவர்க்கு தெரிவிக்க புகார் என்றும் குறித்தனர் என்றும் சொல்லி இருக்கின்றனர். அதேபோல் இந்த ஊருக்குள் படையெடுக்கும் வேற்று மன்னர்கள் அஞ்சிப் ,   'புகார்' என்றும் அழகான நகரம் இது ஆகையினால் பூம்புகார் என்றும் சொல்லப்படுவதுண்டு என்றும் பலவாறு இதற்கான பெயர் காரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய பூம்புகாரின் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறும்  தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் அறுபதினாயிரம் குடிமக்கள் என்று குறிப்பிடுகின்றனர் அப்போது கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல . பூம்புகாரில் வாழ்ந்த அத்தனை மக்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்.

 அதற்காக சிலப்பதிகாரம் அழகான ஒரு பாடலைத் தருவதை இங்கு உங்களுக்காகத் தருகிறேன் . 

திருவின் செல்வியோடு   பெருநில மடந்தையை

 ஒருதனி யாண்ட செருவடு    திண்டோள்

 கரிகாற் பெரும்பெயர்த்  திருமா வளவனைப் பாலை பாடிய பரிசிலன்   றெடுத்த

மாலைத் தாகி யவளங்கெழு செல்வத்து 

ஆறைந் திரட்டியும் ஆயிரம் கொடிகளும் 

வீறுசால் ஞாலத்து வியல் அணியாகி உயர்ந்தோர் உலகில் பயந்தரு தான் மும் 

இல்லது    மிரப்பு நல்லோர் குழுவும் 

தெய்வத் தானமும் திருந்திய பூமியும் 

ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும் விண்ணவர் உலகின் நண்ணிடு  நகரமொடு எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த 

என்று அன்றைய பூம்புகார் பற்றி  இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல , வெளிநாட்டார் குறிப்புகளும் இதை நமக்கு உண்மையாக்குகிறது. 

கிபி முதலாம் நூற்றாண்டில் மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த யவன ஆசிரியர் தாலமி என்பவரும் , மேல் நாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் என்ற நூலிலும் பூம்புகாரின் வளமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு விரிந்து கிடக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.

பூம்புகாரை ஆண்ட புகழ்வாய்ந்த மன்னன் பற்றி கூறும் பொழுது நமக்கு கரிகால் பெருவளத்தான் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. கரிகாலன் பெருமையை பல்வேறுபட்ட இலக்கிய நூல்களும் புகழ்ந்து பேசுவதையும் இங்கு  குறிப்பிட்டுள்ளனர் .சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கரிகாலன் குறித்து நிறைய சிறப்புகளை கூறியுள்ளார் .

நாம் இங்கு கவனிக்கவேண்டியது அந்த மன்னன் தன்னுடைய ஆட்சியில் நாடு என்றென்றும் பஞ்சத்தினால் பரிதவிக்க கூடாது என்ற விரிந்த நோக்கும் தொலைநோக்குப் பார்வையும்  இருந்ததனால் என்னவெல்லாம் செய்தார், என்று குறிப்புகள் உள்ளன.

 இந்த மன்னனின் ஆட்சியை நாம் படிக்கும் பொழுது இன்றைய நமது சமூகத்தின் அரசியல் நமது நாட்டின் ஆட்சி இவையெல்லாம் நம் கண்முன்னே வந்து போகின்றன அதுவும் குறிப்பாக இன்று இந்த வைரஸ் தொற்றால் நாம் அனைவரும் அவதியுற்று வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு இன்றைய சூழலையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழகத்தில் பூம்புகார் என்ற பகுதியில் ஒரு மன்னன் எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும்   பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்களுக்காக எடுத்துள்ளான் என்பதையும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

 கரிகாலன் பொருட்டு பல பெருமையான விஷயங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.  கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஜெயங்கொண்டார் தம்முடைய கலிங்கத்துப்பரணியில் கரிகாலன் பற்றித் தந்துள்ள  குறிப்புகளும் , ஒட்டக்கூத்தர் பிள்ளைத்தமிழில் கரிகால்வளவன் கொடைச் சிறப்பை எவ்வாறு பாராட்டியுள்ளார் என்பதற்கான தரவுகள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம் என்பது என்ன என்பதற்காகவே ஒரு தலைப்பில் சில பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .அந்த பட்டினபாக்கம்  பிரம்மாண்டமான ஒரு நகரமாக இருந்திருக்கிறது .இங்கு அமைச்சர்களுக்கான வீடுகள், படைத்தலைவர்க்கான மாளிகைகள், அரசாங்கத்தை பணிபுரிபவருக்கான  இருப்பிடங்கள் ,பெரிய வர்த்தக துறையில் அங்கம் வகித்தவர்களுக்கு வீடுகள் உழவுத் தொழிலை வளப்படுத்தும் வேளாளர் பெருமக்கள் இல்லங்கள் , அரண்மனை, அரண்மனையைச் சூழ்ந்துள்ள ராஜபாட்டை, அங்கங்கே ஆலயங்கள், பரந்தாமன் கோவில், சூரபதுமனுக்கான  தனிக்கோயில், ஈஸ்வரன் கோவில் இப்படி பலவகையான கட்டமைப்புக்கள் உடன் பெற்ற நகரமாக பட்டினப்பாக்கம் இருந்திருப்பதை சிலப்பதிகாரம் அழகான பாடல் வழியே வெளிப்படுத்துகிறது .

 பூம்புகார் நகரம்  இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது ஒன்று பட்டினபாக்கம் மற்றொன்று மருவூர்ப்பாக்கம்.  ஏற்கனவே கூறிய நகரமைப்பு பட்டினப்பாக்கத்தில் உள்ளதோடு மறுபக்கத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் பரதவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் மற்றவர்கள் கலந்துரையாட தக்க வகையில் கடற்கரையை ஒட்டிய கிழக்கு பகுதி மருவூர்ப்பாக்கம் என்று அழகாக பிரித்துள்ளனர்.

நாளங்காடி என்பது பற்றி அழகாக விளக்கம் கொடுத்துள்ளனர்.இதை பற்றியும் அழகாக விளக்குகிறது சிலப்பதிகாரம் . பட்டின பாக்கத்திலும் மருவூர்ப் பாக்கத்திலும் வாழ்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டும் பொருட்களை  வாங்கிக்கொள்ளும் பொருட்டு பகல் நேரத்தில் செயல்படக்கூடிய கடைகள் இருந்திருக்கின்றன .அவற்றிற்குப் பெயர்தான் நாளங்காடிகள் என்று அழகாகக் கூறியிருக்கின்றனர் .

ஒவ்வொன்றிற்கும் பொருள்பட இந்த நூலில் விளக்கம் கொடுத்துள்ளனர் பூம்புகாரில் ஐந்து வனங்கள் இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றும் எதற்காக பயன்பட்டன என்ற குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் வாசிக்கும் பொழுது சற்று பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. இங்கு  குறிப்பிடப்பட்டவை பெரும்பாலும் உண்மையை தகவல்களாகவே இருக்குமென நம்புகிறேன் .

சற்றே.. கூடக் குறைய இருந்தாலும் இவ்வளவு வளம் பொருந்திய  நாட்டை கொண்ட பகுதி எல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்கிறது என்பது வியப்பே .

 பூம்புகார் ஐவகை மன்றங்கள் குறித்தும் ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க .வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் நின்ற மன்றமும் , பூத சதுக்கம்,  பாவை மன்றம் என்று இன்று நம்மூர்களில் நாம் பார்க்கும் பூம்புகார் கடைகளில் இருக்கின்றன அல்லவா அந்த அமைப்பில் இருக்கக் கூடியவை தான், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களும் உள்நாட்டு வியாபாரம் செய்யக்கூடிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடம் தான் வெள்ளிடை  மன்றம் என்று குறிப்புகள் உள்ளன ரொம்ப அழகாக இருக்கிறது ஒவ்வொரு விஷயமும்.

யாருக்குப் பயன் தருகிறதோ இல்லையோ தமிழ் குறித்தும் வரலாறு குறித்தும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும். அதே போல நமது வரலாறுகளையும் இலக்கியங்களையும் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

பல வருடங்களுக்கு முன்பு சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் நான் படித்ததினால் தமிழ் பாடமும் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சி என்று அந்த காலகட்டங்களில் முடிந்து விட்டதனால் இந்த புத்தகத்தை நான் விரும்பித்தான் படித்தேன் ரொம்ப அழகான புத்தகம்.

உமா