Sunday 15 May 2022

மணல் வீடுகள்



புத்தகம் :மணல் வீடுகள் 
ஆசிரியர் : இந்துமதி
குரல்.. ஜெயகீதா
நேரம் : 4 மணி 48 நிமிடம் 

எழுத்தாளர் இந்துமதி அவர்கள் எழுதிய நாவல். சசி , புவனா , கிருபா இவர்கள் மூன்று பேரையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கதை பெண்களில் இருக்கும் பல வித குண நலன்களை பல பாத்திரங்கள் வழியாகக் காட்டுகிறது. குடும்பம்  வறுமையால் அல்லாடும் சூழல்.  வேலை கிடைக்காமல் பல மாதங்களாக அல்லாடும் சசி ,எத்தனையோ அலுவலகங்களை ஏறி இறங்கி ஓய்ந்து போன வேளையில் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை வைத்து ஓரிடத்தில் வேலைக்கு  விண்ணப்பிக்க , அழைக்கிறார்கள் சசியை . அவள்அங்கு சென்ற பொழுது எந்த  வேலைக்காக விண்ணப்பித்திருந்தாளோ, அதுவே அவளது வாழ்க்கையாக மாறிப் போகின்றது. புவனா கிருபா தம்பதியினருக்கு குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாக சசி மாறுகிறாள். பணம் ஒரு காரணம் இல்லை என்றாலும் கிருபாவின்   மீது ஏற்பட்ட காதல் உணர்வால் அதை ஏற்றுக் கொண்டாலும் பணமும் ஒரு அடிப்படைக் காரணியாக விளங்குகிறது டெஸ்ட் டியூப் பேபி பற்றி இப்பொழுது பேசுகின்றோம் ஆனால் நேரடியாக ஒரு குடும்பத்துடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு செயலை பதிவுசெய்கிறார் இந்துமதி ஏதோ திரைப்படத்தில் கூட இதே போன்ற ஒரு கதை பார்த்ததாக எனக்கு நினைவு இப்படியான மனிதர்கள் இருக்கின்றார்களா இந்த சமூகத்தில் இருந்தார்களா என்பது போல சசியின் குணம் கிருபாவின் குணம் சாந்தமான அன்பான அருமையான ஒரு கணவன் புவனாவிடம் அவன் படும் வேதனையைக் கண்டு அதைப் போக்குவதற்காக தன்னையே ஒப்புக் கொடுக்கக்கூடிய ஒரு பெண்ணாக சசி வருகிறாள் .சசியினுடைய தோழி சாந்தி இப்படி எல்லாம் தோழிகள் இப்பொழுது இருக்கிறார்களா என்பது அதிசயமாகத்தான் இருக்கிறது மிக உயிர்ப்பான பாத்திரங்களைப் படைத்து நாவலை சுவைபட கூறியிருக்கிறார் ஆசிரியர் .இந்த  மணல் வீடுகள் வெயிலுக்கும் மழைக்கும் தாங்காத வீடுகளாக இறுதிக் கதை முடிகின்றது.

No comments:

Post a Comment