Sunday 15 May 2022

யாருக்காக அழுதான்



குறு நாவல் : யாருக்காக அழுதான் ? (ஒலிப் புத்தகம் )

ஆசிரியர் : ஜெயகாந்தன்

குரல் : குலசேகர்

நேரம் : 1 மணி  28 நிமிடம்

ஒரு முதலாளியையும் தொழிலாளியையும் பணத்தால் அல்ல குணத்தால் வேறுபடுத்திக் காட்டி நெகிழ வைக்கிறது நாவல் ,ஜோசப் தான் முக்கிய கதா பாத்திரம். ஒரு தங்கும் விடுதியின் பணியாளர்கள் , அவர்களது அன்றாட வாழ்க்கை இவர்களிலிருந்து ஜோசப்பின்  வாழ்க்கை எவ்வாறு மாறுபடுகிறது ? ஜோசப்  எல்லோரிடமும் எத்தகைய அன்பு மிக்கவனாக இருக்கிறான் , அடுத்தவர்களுக்காகத் தன்னை எப்படி எல்லாம் வருத்திக் கொள்கிறான் என்பதை ஒவ்வொரு வரியிலும் உணர வைக்கிறது இக்குறுநாவல் .

வளர்ந்து வரும் கார்ப்பரேட் வணிகச் சூழலில் அந்த கிராமத்து உணவு விடுதி நலிவடைந்த சூழலில் அதன் முதலாளி கடன்களை அடைக்க , கவலையுற்றிருந்த வேளையில்  விடுதியில் தங்க வந்த வாடிக்கையாளர் மது போதையில் இருக்கும் போது அவரிடம் இருக்கும் பணத்தைக் களவாடி வைத்துக் கொள்கிறார். 

 அடுத்த நாள், அந்தப் பழி ஜோசப்பின் மீது சுமத்தப்பட்டு அடி வாங்கும் சூழலில் கூட நான் எடுக்க வில்லை என்று மட்டும் கூறும் ஜோசப் கதாபாத்திரம் , யார் எடுத்தார்கள் எனத் தெரிந்திருந்தும் இறுதி வரைக்கும்  காட்டிக் கொடுக்காமலேயே அமைதி காக்கும் போக்கு , மூன்று குரங்குகளின் பொம்மையை வைத்துக் கொண்டு அதற்குரிய விளக்கத்தைக் கேட்கும் அப்பாவித் தனத்தின் பின்னே தியாகம் சொறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கை இருப்பதை ஜோசப் வழியே ஜெயகாந்தன் படைத்திருப்பது  நெகிழ்ச்சி .

மனதில் நிற்கும் கதையும் கதாபாத்திரங்களும் .  
சிறப்பான குறுநாவல்

No comments:

Post a Comment