Monday 13 August 2018

AID INDIA -Sudar Amaipu-Lions

இன்றைய நாளின் சிறப்பு (12.08.18):
----------------------------------------------------------

நேற்று காலை முகநூலில் தோழர் சுடர்நடராஜன் பதிவு , பழங்குடிக் குழந்தைகளுடன் சென்னைப் பயணம் நண்பர்களின்  தகவலுக்காக எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் வாட்ஸ் அப்பில் பயணத் திட்டத்தை அனுப்பி , உங்களை எப்போது சந்திக்கலாம் எனக் கேட்டிருந்தார்.

அதற்கு முன்பே தோழர்  Krishnamoorthy Jayaraman , உமா நடராஜனிடம் பேசுங்கள் , குழந்தைகளுடன் சென்னை வருகிறார் என்றார்.

சனிக்கிழமை , நேற்று மாலை தான் நடராஜனிடம் பேசி இன்று சந்திப்பதாகக் கூறினேன். மனதின் ஓரம் ஒரு சின்ன நெருடல் , குழந்தைகளை சும்மா போய்ப் பார்க்கத் தோணல ,

அரிமா தலைவர் நண்பர்  Sathyanarayanaraj Balaguru விடம் இதைக் கூறி , குழந்தைகளுக்கு உதவி கேட்க , உடனே .. நல்லது ... நிச்சயமாக செய்யலாம் , அவர்களது தேவை என்ன என்று கேளுங்க உமா என்றார். நானும் இதை நடராஜனிடம் கேட்க , சரி ... குழந்தைகளுடன் பேசிவிட்டுக் கூறுகிறேன் என்றார்.

அதே போல மாலை 6.30 மணியளவில் , 30 குழந்தைகள் .... அவர்களுக்கு  பள்ளி செல்ல பைகளும் , அதனுள் பேனா , பென்சில் , ரப்பர் , கூர்ப்பி இவை இருந்தால் நல்லது எனத் தெரிவித்தார். (6 - 8 வகுப்புக் குழந்தைகள்)

உடனே சத்யாவிடம் தெரிவிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. Sgopalakrishnan Subramaniam இவரது உதவியுடன் அனைத்துப் பொருட்களும் வாங்கி  , பள்ளி செல்லப்  பைகள்  (School Bag) ஆர்டர் செய்து , 3 மணி நேரம் கழித்து திரும்ப சென்று குரோம்பேட் ரயில் நிலையத்தில்  அதைப் பெற்று , இரவு 12.30 வரை பேக்கிங் செய்தோம்.

இன்று காலை எய்டு இந்தியா நிறுவனத்தில் Vasanthi Devi அம்மா , சுடர் அமைப்புக் குழந்தைகள் அனைவரையும் சந்தித்து , அவர்களுடன் சற்று உரையாடிவிட்டு , சென்னை விஷன் 101 லயன்ஸ் சார்பாக தலைவர் சத்யாவும் , அவரது தந்தையும் வஸந்தி தேவி அம்மா முன்னிலையில்  குழந்தைகளுக்கான பரிசாக பைகளையும் பொருட்களையும் வழங்க அனைவரது முகமும் மலர்ந்தன மனமும் தான்.

கொங்காடை கிராமத்தின் இளம் விஞ்ஞானி சின்னக் கண்ணன் தன் அனுபவத்தைப் பகிர , செயல் வீரர்களை உருவாக்கும் சுடர் அமைப்பை எண்ணி பெருமை கொள்ள முடிகிறது.

தொடர்ந்து கடந்த மாதத்தில் மிகப் பிரபலமான நடுப்பாளையம் பள்ளிக் குழந்தைகளுக்காக  ஆசிரியர் தேன்மொழி அவர்களிடம்  ( நடுப்பாளையம் பள்ளி பற்றி தகவல் வேண்டுவோர்  பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் பார்க்க )
காகிதப் பாவைகள் புத்தகம் 4 எண்ணிக்கையில் Crea வின் பரிசாக  வழங்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகள் ஒரு செயல் வழிக் கற்றல் செயல்பாட்டில் ஒன்றிவிட , வஸந்திதேவி அம்மா , நான் , நடராஜன் , கோபாலகிருஷ்னன்  , லயன்ஸ் சத்யா , அவரது தந்தை பாலகுரு ஆகியோர் இயக்க செயல்பாட்டு திட்டங்களில்  மூழ்கிவிட்டோம்.

தோழர் நடராஜன் தனது சத்தியமங்கல வனப் பகுதிப் பழங்குடியினப் பள்ளிகளில் 3 பஞ்சாயத்துகளில் 20 பள்ளிகளை இணைத்து எவ்வாறு பள்ளி மேலாண்மைக் குழுக்களைப் பலப்படுத்தியுள்ளார் என்பதை விரிவாக விளக்கினார் ,

ஆகஸ்டு 15 கிராம சபைக் கூட்டத்தை நோக்கி எவ்வாறு அதன் நகர்வு  உள்ளது. வெற்றிக்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்று மிக அழகாக நம்முடன் பகிர்ந்தார். இதையே நாம் ஒரு மாதிரியாகக் கொண்டு மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லலாம் என தலைவர் வஸந்தி அம்மா கூற , அதற்கான திட்டமிடலும் ஆரம்பித்துள்ளது. இது பற்றிய விளக்கமான பதிவு பின்னர் எழுதுகிறேன்.

இப்படியாக இன்றைய நாள் மலைவாழ் குழந்தைகளின் அன்போடு முடிவுக்கு வந்தது. கேட்டவுடன்  சுமார் பதினைந்து ஆயிரம் (ரூ15000) செலவு  செய்து உதவிய லயன்ஸ் சத்யாவிற்கு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும் , அசத்தும் அரசுப் பள்ளி A3 ஆசிரியர்கள் குழுவும் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
உமா

No comments:

Post a Comment