Saturday 4 August 2018

குக்கூ

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அரங்கம்
குக்கூ காட்டுப்பள்ளிக் குழுவுடன் (04.08.18)

வாழ்வின் பெருங்குரலெடுத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கத்த வேண்டும் போல் தோன்றிய நேரம் இன்று காலை 11 முதல் 2 வரை ..

ஆம் . கோயில் அரங்கத்தின் வளாகத்தில்  ஆயிரம் பேருக்கும் மேலே  .. சிறு குழந்தைகளாய் , பள்ளி மாணவர்களாய் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , தன்னார்வலர் , ஊர்க்காரர்கள் என ஆரவாரமான ஒரு பெருங் கூட்டமாக குழுமியிருக்க , அகவொளி மனோகர் தேவதாஸ் தனது வயதினினும் பெரும் அனுபவத்தைப் பெற்றது பற்றி மகிழ்வோடு பகிர ,

சுற்றிலும் குழந்தைகள் வரைந்து இருந்த ஓவியங்கள் அவர்களது கனவுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்க  ....

சரவணன் வேலு .. அட என்ன ஒரு அட்டகாச நாடகம் ..கடலுக்குள் பூதம் ... இந்த வண்ணமயமான வழமையான கம்பீரக்  குரலின் தெளிவும்...ஹே...... ஓ.... உம் இன்னும் காதில் ஒலிக்கிறது. பூதத்தின் , அம்மாவின் , கோமாளியின்  வெளிப்பாடுகள் அத்தனையும் ஆயிரம் தங்கக் காசுகளுக்கும் மேலே பொற்கிழி பெறும் தரமானவை.

இது மட்டுமா ..... ஈரோட்டிலிருந்து வந்திருந்த கலைத் தாய் குழுவின் பறை முதலான பல கலைப் பொக்கிஷ இளைஞர் கூட்டம் .... ஆரவாரம் , சந்தோஷம் , ஆர்ப்பரிப்பு ,.. உலகமே அப்போது எங்கள் காலடியில் .....

பரிசளிப்பு , பகிர்வு எல்லாம் முடிந்து .... பிரார்த்தனை .....

குக்கூ காட்டுப்பள்ளி
சிவராஜ் .... எங்கிருந்து பெற்றாயடா இவ்வளவு தெளிவை .... அரச்சலூரில் இருந்த வந்தவனுக்குள் இவ்வளவு பிரம்மாண்டங்கள் ஒளிந்துள்ளதே ....
எப்படி ஒரு எளிமை !!!!!!
எல்லாவற்றிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கும்  ....

பிரம்மாண்டமான கோபுரங்களை மட்டுமே பார்க்கிறோம். காலுக்கடியில் மிதிபடும் மண்ணின் அடியில் ஆயிரக்கணக்கான ரத்தமும் சதையும் புதையுண்டவரையும்  நாம் எண்ண வேண்டும் என உலகத்துக்கான ஒரு நீதியைக் கூறி மனதை உரசிச் சென்ற நீயும் , உன் அந்தகாசச் சிரிப்பும் என்னுள் ஒரு ஞானியை சந்தித்த அனுபவத்தைத் தந்த தடா கண்ணா ..... தேடி வந்து அக்கா என நீ கண்டு கொண்ட தருணம் ... இவ்வளவு நாள் குக்கூ வராதது தவறோ எனத் தோன்றியது .

தாமரை : கண்ணம்மா .... உன் மென் குரலெடுத்து ஆதிரைக்கான பாடலாக ... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...... என்ற பாடலின் வரிகளை எல்லோருக்குமான பாடலாகத் தந்ததை மனம் கொண்டாடி உன்னை வாழ்த்துகிறதடி  சின்னப் பெண்ணே ...

ஆதிரை .... நீ எப்படி இப்படி மென்மையாக ... மற்றொரு நாள் உன்னையும் மற்ற உறவுகளையும் சந்திக்க ஆவலாக ...

அழகான உறவுகள் , எதார்த்தமான கற்பனைகள்

ஜனனத்தின் பயனாக இந்த நாள். சிவனை வழிபட மறந்து இவர்களை எண்ணி இன்னும் தூங்காமல் ...

உமா

No comments:

Post a Comment