அன்பின் முடிவு ...
கிறுக்கல்களால் ஒவியமானது அந்த மனது....
ரணங்களால் நிறம் பெற்றன அந்த ஓவியங்கள்
துரோகங்கங்களால் நிரம்பி வழிந்தன அந்த ரணங்கள்...
ஏமாற்றங்களால் புடமிடப்பட்டன அந்த துரோகங்கள் ...
எதிர்பார்ப்புகளால் பின்னப்பட்டன அந்த ஏமாற்றங்கள் ...
அன்பினால் சேமிக்கப்பட்டன அந்த எதிர்பார்ப்புகள் ....
அந்த அன்பின் விளைவுகளே கிறுக்கல்களாகிய கதை இதுவே ...
உமா
No comments:
Post a Comment