Monday 11 June 2018

அன்பு செய் கண்மணியே

எனக்கும் உனக்குமான ...

அன்பெனப்படுவது யாதெனின் .....

விருப்ப எண்ணங்களால்  நிரம்பியிருத்தல் ..
சிந்தனைத் தெளிவால் கட்டுண்டு இருத்தல்...
உயிருணரும்  உணர்வால் மகிழ்ந்திருத்தல்...
நடைமுறைப் புரிதலால் விலகியிருத்தல்...
எனக்காக நீயும் உனக்காக நானும்...
என்ற எண்ணங்களால் இணைந்து ... தொலைவால் விலகி மனதால் நெருங்கி...
எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்திருத்தல்  ....
நினைவால் வாழ்ந்து நிழலாய் உணர்தல்..
பொருளோ பரிசோ தேவையில்லை...
உனக்கும் எனக்கு மான அன்புப் புரிதலில் ...
புகழ்ச்சி வார்த்தைகளோ பேரு வகையோ...
புடம் போடுவதில்லை  எந்நிலையிலும்...
நமக்கான அன்பு பாராட்டுதலில் ....
எதார்த்தங்களும் எளிய புரிதலுமே
எல்லாவற்றையும் அன்பின் அனைத்து எல்லைக்குள்ளும் கொண்டு வர....
ஆதலால் ....
அன்பு செய்வோம் எனது கண்மணியே ....

உமா

No comments:

Post a Comment