Friday 22 June 2018

நட்பு வட்டம் -1

நானும் காந்தாவும்
-----------------------------

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 3 பள்ளிகளில் தொடக்கப் பள்ளி , உயர்நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி என அனைத்திலும் ஒன்றாகப் படித்தோம். சில வகுப்புகளில் பிரிவு மாறி வேறு வகுப்பறையில் இருப்போம். 1981 - 1993 வரை அநேகமாக பல வருடங்கள் ஒன்றாக இருந்தோம்.

அவள் பெயர் காந்த லட்சுமி , 5 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியில் பின்புறம் ஒரு சறுக்கல் பாதை இருக்கும். அதன் வழியே ஏறி காந்தா வீட்டுக்குப் போய் விடலாம் .. தினமும் காலை மாலை இன்ட்ர வல் நேரம் அவங்க வீட்டுக்குத் தான் கழிவறை பயன்படுத்த செல்வேன். ( அரசுப் பள்ளியில் அப்போது இருந்தே திறந்த வெளிக் கழிப்பறை தான். )

நியூட்ரின் சாக்லேட் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு .....காந்தா தான்  5 ஸ்டார் சாக்லேட் அறிமுகம் செய்து வச்சா , அவங்க பெரியம்மா கோயம்புத்தூரில் அவினாசிலிங்கம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தாங்க. அவங்க வரும் போதெல்லாம் 5 Star சாக்லேட் கொண்டு வருவாங்க , அதை எடுத்துட்டு ஸ்கூலுக்கு வந்துடுவா , பக்கத்துல 2 பேருக்கு ஒன்னு ஒன்னு  தருவா , எனக்கு மட்டும்  2 ,3 தருவா.
(அவ்ளோ பாசம் )

ஒரு ப்ரெளன் ஒயர்ப்பை சின்னதா வச்சு இருப்பா அதில் ஒரே புத்தகம் , நோட்டு போட்டு ட்யூஷன் வருவா , காலை 5.45க்கு எல்லாம் அவங்க வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விடுவேன் பெரும்பாலான நாட்களில் நான் தான் அவளை எழுப்புவேன் தூக்கத்திலிருந்து .. 8ஆம் வகுப்பில் அவளோட சேர்ந்து வள்ளியம்மா டீச்சர் கிட்ட டியூசன் போவேன் ...6 மணிக்கு நாங்க முதல் ஆளா இருப்போம் .

ரொம்ப நல்லா படிப்பா , எனக்கு ஆங்கிலம் பெரும் பிரச்சனையா இருக்கும் , பொறுமையா தான் மனப்பாடம் பண்ணுவேன். ஆனா காந்தா சீக்கிரம் மனப்பாடம் செய்துடுவா , ஆனா Pair Study என்னோட தான் செய்வா , பொறுமையா Handle பண்ணுவா , எப்பவாச்சும் கோபம் வந்தா  உமா .....ன்னு ,......கத்துவா ....

ரொம்ப கேஷ்வலா படிப்பா , கஷ்டப்பட்டுக்கவே மாட்டா , சிரிச்சுட்டு தான் இருப்பா , அதனாலயே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரே ஒரு விஷயம் எனக்குப் பிடிக்காதது .....அடிக்கடி நான் அவ பக்கத்துல பேசிட்டு , படிச்சுட்டு  இருக்கும் போது , சுத்தி இருக்கவங்க கிட்ட கன்னடத்துல பேசப் போயிடுவா ... நான் ...காந்து .... தமிழ்ல  பேசு ன்னு சொல்லித் திட்டுவேன்.

அவன் சட்டைப் பாக்கெட்டில் எப்பவும் பட்டாணி வச்சிருப்பா , அதப் பார்த்து நானும் 5 பைசாக்கு பட்டாணி வாங்கி சட்டை ஜோப்பில் போட்டுக்குவேன். அப்புறம் அது 20 பைசா வரைக்கும் 7 ,8 வருஷத்தில் விலை ஏறுச்சு. எங்க கூட மருதுன்னு ஒரு பையன் படிச்சான் , அவங்க அப்பா பொரி கடைல தான் வாங்குவேன்.

எங்க இரண்டு பேருக்குமே  சுருட்டை முடி .. அது கூட சில நேரம் ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. அவ தமிழ் , இங்கிலீஷ் 2 கையெழுத்தும் அழகா எழுதுவா .

ஒல்லியா நெடுநெடுன்னு வளர்ந்து இருந்ததால பெரிய க்ளாஸ் போக போக என்னை விட்டு அடுத்தடுத்த பின்னாடி பெஞ்சுக்குத் தள்ளப்பட்டாள். .ஆனாலும் எப்பவுமே நாங்க ஃபிரண்ட்ஸ் தான். அவள மாதிரியே அவங்க அப்பா , அம்மா இரண்டு பேரும் என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க ,

+2 முடிச்சுட்டு இரண்டு பேருமே கோயம்புத்தூர் ல தான் படிச்சோம் , ஆனா அவ அவினாசிலிங்கம் கல்லூரியிலும் நான் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் படித்தோம் . விடியற்காலை ஜலகையிலிருந்து கிளம்பும் பழனி செல்லும் பேருந்தில் ஈரோடு வரை செல்லும் போது எப்போதாவது பார்த்துக் கொள்வோம். அதுவும் கொஞ்ச காலத்தில் நின்று விட்டது.

அவள் BSC படித்து முடித்த உடனேயே திருமணம் செய்து விட , கடைசியா அவள கல்யாண மேடையில் தான் பார்த்தது ... அது முடிஞ்சு சரியா 23 வருஷம் ஆச்சு , மனசு எப்போதும் ஜலகை போனா , கடவீதிப் பக்கம்  போனா  காந்தாவை நினைக்கும் , அது ஒரு கனாக் காலம். 

அந்த ஒரு நெகிழ்வான தோழி காந்தலட்சுமிய தான் நேத்து ஜலகையில் சந்திக்க ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
லவ்யூ காந்து❤️..... அப்போதெல்லாம் இப்படிப் பேசத் தெரியாது. இந்த மகிழ்ச்சி இன்னும் பல வருஷம் என்னுடன் இருக்கும் .

தொடரும்
அன்புடன்
உமா

No comments:

Post a Comment