Wednesday 28 March 2018

மாணவியும் ஆசிரியரும்

மாணவியும் ஆசிரியரும்
*************************
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் யாராவது ஒரு இன்ஸ்ஃபிரேஷன்  அமைவார்கள்  , அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர் பெரும்பாலோர் வாழ்வில் அந்த இடம் ஆசிரியருக்குக் கிடைத்து விடுகிறது. அப்படி மாணவப் பருவத்தில் என்னுள் நுழைந்த பலருள் குறிப்பிடத்தக்கவர் எனது உயர்நிலைப் பள்ளி  ஆசிரியர் திருமதி வள்ளியம்மை அவர்கள் .பள்ளிப் படிப்பு முடிந்து 25 வருடங்கள் நிறைவுற்றாலும் என்றும் என் மனதில் நேற்று போல் நெருக்கமானவர் இவர்.

ஒரு குறிப்பிட்ட வருடங்கள் இடைவெளிக்குப்  பிறகு கடந்த வருடம் அவரது மகன் வழியே முகநூல் வழியாகத் தொடர்பு கொண்டதால் டீச்சரிடம் அலைபேசியில் பேச முடிந்தது. என்றாவது ஒரு நாள் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று முன்தினம் Sharan Gurunathan அண்ணாவிடமிருந்து குறுஞ்செய்தி , வரும் 20 நவம்பர் அம்மாவின் பிறந்த நாள் , ஆகவே 19 ஞாயிறு மாலை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என ....

இதைவிட வேறு பேறு என்னவோ ? கண்டிப்பாக என்று கூறி , ஒரு அறக்கட்டளை சிறந்த சமூக சேவகர் என்ற விருதை அளிக்க அழைத்திருக்கிறார் அதைப் பெற்றுக் கொண்டு வருகிறேன் என்று  கூறஅவருக்கும் மகிழ்ச்சி ,விழா முடிந்து அவர்களை சந்திக்க செல்கிறேன் ....

அண்ணா கூறுகிறார் , அம்மாவிற்கு நீங்கள் வருவது தெரியாது சர்ப்ரைஸ் ....வீட்டிற்குள் நுழைந்து  அவர்களது அறையில் அண்ணா .

"அம்மா , உங்களை யாரோப் பார்க்க வந்து இருக்காங்க ,
அப்படியா ? தோ வரேன் என வெளியே வர ....

டீச்சர்..... உமா வந்திருக்கேன் எனக் கூறி தடாலடியாக அவரது கால் தொட்டுப் பணிய எனது கண்களும் அவரது கண்களும் மகிழ்ச்சி வெள்ளம் ,
என்னைக் கட்டிக் கொண்டார் , உடனே கையில் அந்த அவார்டைக் கொடுத்து சால்வையையும் போர்த்தி விட்டேன். சிரிப்பும் அழுகையும் என அவரது கண்களில் ....

என்னத் தவம் செய்தோமோ என அவர் நினைக்கும் படியான ஒரு மாணவியாக என்னை வடிவமைத்த சூழல்களுக்கு ஆயிரம் நன்றிகள் ...
அவரது குடும்பமும் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள , இருவரும் அமர்ந்து சற்று நேரம் பலப் பழங்கதைகளை நினைவு கூற இடையிடையே அண்ணாவும் இணைந்து டியூஷன் பசங்க , ஜலகண்டபுரம் , இன்றைய கல்வி முறை எல்லாவற்றையும் பேசினோம்.

தொடர்ந்து இரவு உணவுக்கு ஒரு வட இந்திய உணவு வகை தயாராகும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் அண்ணா . அங்கு எனது மகனும் கணவரும் வந்து விட எனது ஆசிரியருடன் இரு குடும்பமும் ஒன்றாக நிறைய பேசிக் கொண்டே உணவருந்தினோம். அண்ணர கேட்டார் , கனிஷ்கர் என ஏன் வரலாறு பேர் வச்சீங்க ? அதுக்கும் டீச்சர் தான் அண்ணா காரணம் , அந்தளவிற்கு வரலாறு நடத்துவாங்க அதனால் நான் 7ஆம் வகுப்பில் வரலாற்றில் கனிஷ்கப் பேரரசு பற்றி படிச்சதால தான் என் மகனுக்கு கனிஷ்கர் எனப் பெயர் வைத்தேன் என்று கூறியதை எண்ணி அவர் சிரித்தார்.

எல்லோரும் அந்த மாலைப் பொழுதை பழைய நினைவுகளுடன் பேசிக் கொண்டு, மிக அருமையான உணவுடன்  மிக மிக அன்புடன் உண்டு கழித்தோம். எனது நினைவுகள் ஜலகண்டபுரம் , பள்ளி , எனது தோழர் , தோழிகள் ,பள்ளியில் டீச்சருடன் இணைந்து எனக்குக் கற்றுத் தந்த மற்ற ஆசிரியர்கள் என நீண்ட நேரம் பேசிப் பேசி மகிழ்ந்தோம்.

எனது கணவரையும் Sgopalakrishnan Subramaniam டீச்சர் பாராட்டினார் ஏற்கனவே இருவருக்கும் அறிமுகம்  உண்டு , உமா இது போல செயல்பாடுகள் செய்ய நீங்கள் ஒத்துழைப்பு தருவது ரொம்ப சந்தோஷம் என்றார். பேத்திகள் அதித்தி ,அனு , மருமகள் வினோதா என மகிழ்ச்சி சூழ் உலகில் எனது ஆசிரியர் வாழ்வது எனக்குப் பெருமையாக இருந்தது. காலத்திற்கு ஏற்றார் போல் நம்மை நாம் மாற்றிக் கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் உமா என அவர்கள் தனது அனுபவத்தை எனக்குப் பாடமாகத் தந்து வழியனுப்பினார்.

எத்துணை ஆயிரம் பேர்  டீச்சரின்   மாணவர்கள் இருந்தாலும்இது போல யாருக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்காது என எண்ணி .... நிரம்பிய வயிறும் நிறைந்த  மனதும்  உடன் பயணிக்க வீடு வந்தோம். எனது டீச்சர் 100 ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ... சரண் அண்ணாவிற்கும் வினோதா அண்ணிக்கும்  எங்கள் அனைவரின் நன்றிகள் .

No comments:

Post a Comment