அருணா ராய்
ஏழு வருடங்கள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ... அதை உதறி விட்டு , இந்த சமூக மக்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கையிலெடுத்ததால் உருவானது தான் RTI ACT.
மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக இன்றும்
குரல் கொடுத்து வரும் இவரை , இன்று காலை
வெப்மினாரில் சந்தித்தது ... அற்புதமான நேரம்
இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் அதிகாரம் , அரசியல் அதிகாரத்தின் பொருள் , சமத்துவமின்மையின் பாதிப்பு , பொருளாதார அடுக்குகளின் உண்மையான நிலை , ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் , பாலினப் பாகுபாடு மட்டுமில்லாமல் எல்லா வகையான பாகுபாட்டிற்கு எதிராகக் கேள்வி கேட்பது என காத்திரமான ஒரு உரையாடலைத் தந்த அருணா ராய் அவர்களது விளக்கங்கள் மிகவும் வலிமையாக என்னை பாதித்தது.
குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும் , பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு எவ்வாறு சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பதையும் அழகாக விவரித்தார்.
மதங்கள் சார்ந்த புரிதல் இங்கு எவ்வாறு இருக்க வேண்டும் , மதச்சார்பற்ற நாட்டின் பொருள் என்ன , இங்கு அதன் பொரு எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெளிவாகப் புரிய வைத்தார்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இவ்வுலகில் எண்ணற்றோரின் எண்ணத்தில் இணைந்திருந்த ஒன்று தான் , அதை உருவாக்கி வெளிக்கொண்டு வந்ததால் மட்டும் என்னுடைய ஐடியா என்று சொல்ல முடியாது என்கிறார்.
காந்தியுடன் முதல் முதலில் நாட்டுக்காக நடந்தவர்கள் 50க்கும் குறைவானவர்கள் தான் , ஆனால் அவர்கள் ஊன்றிய விதையின் விளைவு தான் அதன் உறுதி தான் வெற்றியைத் தந்தது என்ற அற்புதமான பதிலை ஒருவரது வினாவிற்குப் பகிர்ந்தார்.
No comments:
Post a Comment