Wednesday 25 March 2020

தசரத் தேவ் - ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன்

ஆதிவாசிகளின்_ஆதர்ச_நாயகன்_தசரத்_தேவ்

வீ. பா. கணேசன் எழுதி 2016  இல் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை,  வாசிக்க வாசிக்க இந்தியாவின் கிழக்கு மூலையில் ஒரு சின்ன மாநிலமாக இருந்த திரிபுரா ஏன் இன்றளவும் தனித்துவம் பெற்று சிறந்த   மாநிலமாக திகழ்கிறது, என்பதற்கான பதில் கிடைக்கிறது அதோடு ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் என்று கூறப்படும் அளவிற்கு தசரத் தேவ் என்ன செய்தார் என்பதற்கும் வரலாற்றுத் தகவல்கள் நமக்கு நிறைய கிடைக்கின்றன.  .கல்வியில் முதன்மை பெற்ற மாநிலமாக திரிபுரா  இருந்துவரும் நிலைக்கு என்ன காரணம், 1947 இல் நமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் 1949 இல்தான் திரிபுரா இந்தியாவுடன் இணைந்துள்ளது.
இந்த மலையைச் சுற்றிலும் வாழ்ந்து  வரும்  ஆதிவாசிகளின்  வாழ்வில் மறுமலர்ச்சி உருவாகக் காரணமாக இருந்த தசரத் தேவ் பர்மா எவ்வாறு தசரத் தேவ் என்று மாற்றம் பெற்றார் என்ற வரலாறு இடம்பெற்றுள்ளது  .

நமது இந்தியாவுடன் இணையும் முன்பு ஆதிவாசி இனத்தைச்சேர்ந்த அரசரின் ஆளுகையில் இருந்த இந்த திரிபுரா எத்தகைய அடிமைத்தனத்திலிருந்து அங்கு இருக்கக்கூடிய மக்கள் ஒருவரும் கல்வி கற்பதற்கு அனுமதிக்க படாமலேயே இருந்திருக்கிறார்கள், இந்த நிலையை மாற்றி திரிபுராவை எவ்வாறு கல்வியில் முதன்மை மாநிலமாகக் கொண்டுவந்தார் தசரத் தேவ் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சுருக்கம் என்று கொள்ளலாம் .

ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து வசதியில்லாத பெற்றோரால் காலம் தாழ்ந்து பள்ளியில் சேர்ந்து ஆரம்பப் பள்ளியில் படித்தது கடினப்பட்டு தனது பள்ளிக்கல்வியை முடிக்கிறார் தசரத் தேவ் . திரிபுராவில்  கல்லூரி எதுவும் இல்லாத நிலையில் கிழக்கு வங்காளத்தின் சில்கட் மாவட்டத்தில் ஹபி கன்ச்  பிருந்தாவன் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்கிறார் தனது படிப்பை பாதியில் விட்டு எவ்வாறு அவர்  ஆதிவாசிகளின் கல்விக்காக உழைக்கிறார் என்பதை கண் முன்னே களமாடத் தருகிறது புத்தகம் .

கிராமங்களிலும் மலைப் பகுதிகளிலும் வாழும் ஆதிவாசி மக்களுடைய கல்வியை பரப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓர் அமைப்பு உருவாகி 1945இல் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இதன் (ஜனசக்தி ) உதவித் தலைவராக தசரத் நியமிக்கப்படுகிறார். முதலில் 11 ஆதிவாசி இளைஞர்கள் மட்டுமே உறுப்பினராக இருக்கின்றனர் பிறகு 400 இடங்களில் பள்ளிகளை மாநிலம் முழுவதும் துவக்குகிறார்கள். ஆதிவாசி மாணவர்களே தான் இந்த பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் அங்கிருந்து துவங்குகிறது தசரத் தேவ் வர்மாவின் மக்களுக்கான பயணம் .
400 பள்ளிகளுக்கும் அங்கீகாரம் கேட்டு அப்போதைய  கல்வி அமைச்சராக இருந்த பிரிட்டிஷ்காரர் ப்ரவுனிடம் கோரிக்கை வைக்க , அவரோ நேரடியாக ஆய்வு செய்து 300 பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்.

ஆனால் ஆதிவாசிகளின்  அரசராக இருந்தவர் அந்த  மக்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டு வந்து இருந்தபடியால்   அங்கீகாரம் பெற்ற 300 பள்ளிகள் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்ட 400 பள்ளிகளையும் ஒழித்துக் கட்டுவதற்காக பல்வேறு அராஜக முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இப்படியான நெருக்கடிகளில் தொடர்ந்து நிகழும் நிறைய போராட்டங்களை சந்தித்து தலைமறைவாக இருக்கிறார் தசரத் தேவ் .இந்த காலகட்டத்தில் தசரத் தேவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுடன் அறிமுகம் கிடைத்து தலைமறைவான  காலத்தில் ஆதிவாசி கிராமங்களில் மக்களுக்கு மார்க்சியம் குறித்த வகுப்புகள் எடுக்கிறார் .

இப்படியாக1948 முதல் 1998 வரை ஆதிவாசி மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார் தசரத்  தேவ் . இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இன்றைய சிஏஏ பிரச்சினைகள் குறித்த ஆரம்ப புள்ளிகளும் நமக்கு புரிகிறது .ஆயுதம் தாங்கிய போராட்டம் கொரில்லா படைகள் எல்லாவற்றிற்கும் இவர் தலைவராக இருந்து ஆதிவாசி மக்களின்  வாழ்வாதாரத்திற்காகப் போராடியிருக்கிறார் .1952 ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தசரத் தேவ் தொடர்ந்து 1957 , 1962, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று மக்களவையில் திரிபுரா மாநிலம் சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாக்க எதிர்கொண்டுவரும் நிலை பற்றியும் எடுத்துக்கூறி அவர்களுக்குத் துணைநின்று வாழ்ந்திருக்கிறார் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசும் ஆதிவாசிகளின் நிலங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற வங்காளிகள் தூண்டிவிட்ட கதையும் மற்றும் சில வஞ்சனைகள் குறித்தும் ஆங்காங்கே கோடிட்டு காட்டப்பட்டுள்ளது .
திரிபுராவின் பூர்வக் குடிகளாக இருந்த ஆதிவாசிகள் சிறுபான்மையினராக மாறியதும் வங்காளிகள் பெரும்பான்மையினராக மாறியதும்,  பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருந்த ஆதிவாசிகள் அனைத்து வகையிலும் ஏற்கனவே முன்னேற்றமடைந்த வங்காளிகளுடன் சமநிலையற்ற அவர்கள் போட்டியிடும் சூழல் உருவானது என பல வரலாற்றுத் தகவல்களை இந்த புத்தகம் நமக்கு தருகிறது. தசரத் தேவை கொள்வதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறது அப்போதைய எதிரணியினரின் பகைமை .

1993 இல் தசரத் தேவ் திரிபுரா மாநிலத்தின்  முதல்வராகிறார்.   இன்றும் இந்தியாவின் விடியலை நோக்கி போராடி வரும் எண்ணற்ற உழைப்பாளி மக்களின் மனங்களிலும் தசரத் தேவ்  நிலைத்து நிற்கிறார். வரலாற்று சிறப்புமிக்க ஜன சிக்ஷா இயக்கத்தின் நிறுவனராக ,நிலப்பிரபுத்துவ அரசாட்சியை எதிர்த்துப் போராடும் மனிதராக , அந்த மாநிலத்தில் ஜனநாயக ரீதியான செயல்பாட்டை நிறுவுவதற்காக ஈடு இணையற்ற போராட்டத்தை நடத்திய தலைமை பல பரிமாணங்களில் எல்லோருக்கும் உதாரணமாக திகழும் தசரத் தேவ் குறித்து கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

புத்தகப் பக்கங்கள் : 30 விலை : ரூ 15 . பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் .

No comments:

Post a Comment