Thursday 2 January 2020

வாசிப்பு - களவு போகும் கல்வி

களவு போகும் கல்வி.

இயல்வாகை வெளியீடாக குக்கூ குழந்தைகள் நூலகம் வெளியிட்டுள்ள 30 பக்க சிறு புத்தகம் நம்மை சிதற அடிக்கிறது. அட்டைப் படத்திலேயே இரும்பு வேலி , கல்வி மறுக்கப்படுவதை பூடகமாக உணர்த்துகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் நாம் பேசிப் பேசி ஓய்ந்து வரும் தேசியக் கல்விக் கொள்கையாகட்டும் , இரண்டு வருடமாகப் பேசி வரும் கல்வி குறித்த பிரச்சனைகளாகட்டும் எல்லாவற்றுக்கும் காரணமான காட்ஸ் ஒப்பந்தம் கையெழுத்துக்குத் தயாராகும் நேரத்தில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. வரிக்கு வரி நாம் இன்று பேசும் கல்வி விற்பனைப் பண்டமாகி விட்ட கதையை , 4 வருடங்கள் முன்பு கூவிக் கூவி குரல் எழுப்பி இருக்கிறது இப்புத்தகம் .  

நீட் தேர்வாகட்டும் , இன்று வந்துள்ள NTA குறித்து என அனைத்தையும் தீர்க்க தரிசனமாக எச்சரித்துள்ள புத்தகம் . 

இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என அழைக்கப்படுவார்கள் என்கிறது இந்நூல் நடந்துள்ளதே. WTO & GATS குறித்து 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் 2015 டிசம்பர் 15 - 18 தேதிகளில் , கென்யா நாட்டின் நைரோபியில் நடக்க இருக்கும் அமைச்சர் நிலை சந்திப்பு கூட்டத்தில் இந்தியா கையெழுத்துப் போடப் போகிறதே என அழுது அரற்றி எழுதப்பட்ட புத்தகம் . இதோ இன்றோடு சரியாக 4 வருடங்கள் முடிந்தது. ஆனால் கையெழுத்து போட்டு உள்ளூர் திருடர்களுடன் வெளி நாட்டுத் திருடர்களையும் அழைத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகள். 

சந்தையின் அடிமைகளாகிப் போனோம் ஆசிரியர்களும் பேராசிரியர்களும். அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும் நிலை வரப் போகிறது.காந்தியும் பகத்சிங்கும் தேசத் துரோகிகள் என பாடங்கள் வரும் என்கிறார் நியாஸ் அகமது. இதோ 2 மாதம் முன்பு பார்த்தோமே காந்தி கொல்லப் படவில்லை என பள்ளிகளில் எழுதப்பட்ட காகித செய்திகள் வட இந்திய மாநிலத்தில் வழங்கப்பட்டதை . 

ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்த நாம்  சுதந்திர நாட்டில் அடிமைகளாக வெளி நாட்டு நிறுவனங்களின் கல்வி வியாபாரத்திற்கு சலாம் போடும் அடிமையாக மாறப் போகிறோம் என்பதை பட்டவர்த்தைமாகக் கூறி எச்சரித்த நூல் தான் இது. ஒப்பந்தத்திற்கு இந்தியா அளித்துள்ள வாக்குறுதிகளைத் திரும்பப் பெறவில்லை என்றால் , இங்கு குறிப்பிட்டுள்ள ஆபத்துகள் எல்லாம் நிஜமாகும் என்று இறுதியில் குறிப்பிட்டுள்ளது 4 வருடம் கடந்து  இன்று நிஜமாகி நம்மை ரணமாக்கியுள்ளது. 

களவு போன கல்வியை நாம் எங்ஙனம் மீட்போம் ?

உமா 

No comments:

Post a Comment