Friday 16 November 2018

மரண வலி

ஏதேதோ  பேச வேண்டும் என்று தான் எப்போதும்  திட்டமிடுகிறது மனது ....
சந்திக்கும் யாவரிடமும் ...
சிந்திக்கும் ஒவ்வொரு நிமிடமும் ..

சந்திப்பின் இறுதியில் ஏனோ
சலனத்துடனே திரும்பி வர
எதுவுமே பேசவில்லை
என்ற முடிவுக்கு வருகின்றது ...

மனம் விம்மும் சில நொடிகளைக் கூட
மனிதர்களிடம் உள் நுழைந்து
புரிய வைக்க  எந்தவித
அவகாசமுமில்லை ...

அறிவின் மாயை இங்கே அன்பின் உண்மையைப் பிடிவாதமாக
ஏற்றுக்கொள்ள மறுக்கும் மரண
நிமிடங்கள் ....

எதை நோக்கி நகர்கிறது வாழ்வு ...
எங்கிருந்து ஆரம்பித்தன
உறவின் சிக்கல்கள்
உணரக் கூட எண்ணுவதில்லை ..

குழந்தைகளின் இயல்பாக
அகம் தந்த நினைவுகள் யாவும் ...
புறம் தள்ளி இகழப்படும்
புரியாத சூழ்நிலைகள் ...

உமா

No comments:

Post a Comment