பெண்ணியம் ..
இருட்டுக் குவியலில் கரி கொண்டு எழுதிப் பார்த்த எழுத்தாய் நீ ....
வெளிச்சச் சிதறலில் கலந்துவிட்ட ஒளிக்கீற்றாய் நீ ....
மழைத் துளிகளின் சாரலில்
சேர்ந்துவிட்ட மேகத் திவலைகளாய் நீ ....
இரைச்சலின் சங்கீதத்தில்
இணங்கி விட்ட ஒலிக் குறியீடாய் நீ ....
தீயின் பரவலில் பற்றிக் கொண்ட காற்றின் மிச்சமாய் நீ ....
பிரம்மாண்டத்தின் நுழைவாயிலில் கால் பதித்த சிறு மூலக்கூறுகளின் மிகச் சிறு அணுக்களாய் நீ ....
உன்னை எங்கிருந்து பிரித்தெடுக்கட்டும் ....
நினைவுகளின் நிழலாக பத்திரப் படுத்துகிறேன். ...
உமா
No comments:
Post a Comment