மழை
******
மழை என்ற ஈரெழுத்துச் சொல்
மனித குல உயிர் நீராகுதே ....
மண்ணை ஈரமாக்கக் கூட இப்போ
மழை வருவதில்லையே ....
காட்டையும் கழனியையும் அழித்து
கானகம் ஆக்கியக் கதை போதுமே
மேற்கத்திய கலாச்சாரமும்
மேலை நாட்டு நாகரிகமும்
உடையும் மனமும் திருடியதோடு
உண்ணும் உணவு விளையும்
உயிர்ப் பயிரையும் திருடிய
ஒவ்வாமை ...மண்ணைக் கெடுத்து
மழையையும் கெடுத்ததே ......
தன் நாடு சுகமாக வைத்தவன்
திட்டமிட்டு நம் நாட்டைத்
தொழில் அமைக்கக் காவு தந்தோமே....
சூழல் அனைத்தும் அவன் வசம்
சூன்யமாகியதே நம் மனம்
கட்டும் ஆலைகள் காவு கேட்க
காட்டையும் மரங்களையும் .....
நாணம் இன்றியே நாம் தந்தோம்
நல்ல மேகமும் நம்மை விட்டு
நலிவடைந்த நாட்களே இன்று ....
எல்லாம் செழிக்க ....
எமது மண்ணே காத்திரு
மழை தேவதை அருள் புரியும்
மகத்தான நாட்களுக்காக ......
No comments:
Post a Comment