மழை
மழையின் அவஸ்தை
மனதை குளிர்விக்கிறது
மருங்கும் துள்ளல்கள்
மழையின் விளைவுகளாய்
மனதை இளமையாக்குகிறது
சன்னலோர ரயில் பயணம்
சடசடவென்ற மழைத்தூறலோடே
சங்கேத ஒலிக் குறியீடுகளின்
சங்கமம் இந்த மாலைப் பொழுதில்
மழையே உன்னை யாசிக்கிறேன்
மழையாகவேப் பொழியேன் அடிக்கடி
No comments:
Post a Comment